Posts

விசை-16

Image
  விசை-16 அடித்துப்பிடித்து இறைவியின் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தான், முகில்வண்ணன். அவனுக்கு அழுகையாய் வந்தது. கண்ணில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது. வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தவன் அலைபேசி அதிர, இறைவிதான் அழைப்பதோ என்று பதைபதைப்பாய், யார் அழைக்கின்றார்கள் என்றும்கூடப் பார்க்காது, “இரா.. ம்மா.. டேய்..” என்று பதறினான். அதில் இறைவிக்கு ஏதோ பிரச்சினையோ என்று அஞ்சி, “டேய் நான் வேலுடா.. என்னாச்சு?” என்று அய்யனார் கேட்க, “அ..அத்தான்..” என்றவன் உடைந்துபோய் அழுதே விட்டான். முகில் இப்படியெல்லாம் உடைந்து அழுவதை அய்யனார் பார்த்ததோ கேட்டதோ இல்லை. “டேய்.. முகில்.. என்னாச்சுடா?” என்று அய்யனார் கேட்க, “அ..அத்தான்..” என்று அழுதானே தவிர ஏதும் பேசவில்லை. “என்னாச்சு முகில்? முதல்ல நீ எங்க இருக்கனு சொல்லு” என்று அய்யனார் கேட்க, “இ..இரா வ்..வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் அத்தான்” என்றான். “என்னாச்சுடா? அ..அவளுக்கு எதும் பிரச்சினையா?” என்று அய்யனார் கேட்க, அவன் நெஞ்சம் அத்தனை பதற்றத்தை உணர்ந்தது அக்கேள்வியில். “நா..நானே என் இராவ ஹ..ஹர்ட் பண்ணிட்டேன் அத்தான்” என்று கதறலாய் மொழிந்தவன், தன் கண்ணீரை அழுந்த...

விசை-15

Image
  விசை-15 வாரம் ஒன்று கடந்திருந்தது. முன்னாள் எம்.எல்.ஏ நாதனுடன் தொடர்புடைய ஆட்களைப் பற்றிய தகவல் தேடலில் அய்யனார் மற்றும் ராஜ் இறங்கியிருந்தனர். அன்று வீட்டில் அமர்ந்து சேகரித்தக் கோப்புகளை அய்யனார் பார்வையிட்டுக் கொண்டிருக்க, அவனுக்குத் தேநீருடன் வந்த காமாட்சி, “எய்யா..” என்று அழைத்தார். அன்னையை நிமிர்ந்து பார்த்தவன் தேநீரை வாங்கி, சூடோடு அப்படியே பருக, வழமைபோல், “இம்புட்டு சூடா குடிக்கதாய்யா” என்றார். “பழகிடுச்சும்மா” என்றவன் வேலையைத் தொடரவும், அவர் மகனிடம் பேச வேண்டும் என்பதைப் போல நிற்க, தன் கையிலுள்ள கோப்பை மூடி வைத்தவனாய் அன்னையைப் பார்த்து, “என்னம்மா?” என்றான். “அ..அந்த புள்ளைகிட்ட பேசினியா எதும்?” என்று அவர் கேட்க, “உங்களுக்கு என்ன சொல்லனுமோ அதை நேரடியாவே சொல்லுங்க ம்மா” என்றவன், “நான் இன்னும் யார்கிட்டயும் சொல்லல” என்றான். அவன் முன் வந்தமர்ந்தவர், “அந்தப் புள்ளைய பிடிக்காம இல்லைய்யா.. ஆனா உன் பேரு கெட்டுப்போகுமேனுதான் யோசிச்சேன். இப்ப நீயும் இம்புட்டு எடுத்துச் சொன்னப் பொறகு..” என்றவர், அவன் தலை கோதி, “உங்கப்பாவ பாத்த கணக்காருக்கு சாமி” என்க, அவனிடம் விரிந்த புன்னகை. “என்...

விசை-14

Image
  விசை-14 அன்று குழந்தையைக் கூப்பிடப் பள்ளிக்கு வந்திருந்த இறைவி, மகளை அழைத்துக்கொண்டு வந்தாள். “போலீஸ் சார் வரலையா ம்மா?” என்று சக்தி கேட்க, “அவங்களுக்கு வேலை இருக்கும் சக்தி. அவங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது. சும்மா அவங்க வரணும் வரணும்னுலாம் கேட்கக்கூடாது. யாரையும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுடா குட்டிம்மா.. புரிஞ்சுதா?” என்று கேட்டாள். “ம்ம்.. புரிஞ்சுது” என்று அவளுக்குப் பின்னிருந்து அய்யனாரின் குரல் கேட்க, உள்ளம் அதிர, உறைந்து நின்றாள். இறைவியின் கரம் பற்றியிருந்தபடி தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்ட சக்தி, “ஐ போலீஸ் அங்கில்” என்று குதூகலமாய் அழைத்து அவனிடம் ஓடினாள். மகள் ஓடவும் திரும்பிய இறைவி, உள்ளுக்குள் நொந்துகொண்டாள். தன்னிடம் ஓடிவரும் ரோஜா மொட்டை அப்படியே அள்ளிக் கொண்ட அய்யனார், அவளுக்கு முத்தம் வைக்க, தானும் பதில் முத்தம் கொடுத்தவள், “தர்ஷ் கூப்ட வந்தீங்களா?” என்றாள். “ம்ஹும்.. குட்டி பாக்கத்தான் வந்தேன். தர்ஷ அவங்க அம்மா கூப்டு போயாச்சே” என்று அவன் கூற, “நிஜம்மாவா? சக்தி பாக்கத்தான் வந்தீங்களா?” என்று கண்கள் விரித்து மழலை மொழியில் கேட்டாள். “நிஜம்மா சக்தி பாக்கத்தான் வந்த...

விசை-13

Image
  விசை-13 தன் மடியில் படுத்திருப்பவளின் அழுகை பெருமூச்சுக்களில் முகிலின் முகமெல்லாம் சிவந்து போனது. துடிதுடித்து அமர்ந்திருந்தான்… “எ..என்னவெல்லாம் பேசிட்டாங்க முகி.. ஜி..ஜீரணிக்கவே முடியல..” என்று திக்கித் திணறி அவள் கூற, ‘இன்னும் இவள் எதையெல்லாம் தாண்டி வர வேண்டுமோ இறைவா..’ என்று தன் தோழிக்காக வருந்தினான். “எ..என் பொண்ணு.. அ..அ..அவ அஞ்சு வயசு கொழந்தடா.. அவளைப்போய்” என்றவளுக்கு தன்னைப் பேசியதை விட மகளைப் பேசியது அதிகம் வலித்தது. எழுந்து அவன் முகம் பார்த்தவள், “உன்னையும் கஷ்டப்படுத்துறேனா முகி?” என்றாள்… அனைத்தையும் பக்குவமாய் அவள் சுமக்கின்றாள் என்பதற்காக அவளுக்கு வலியென்று இருந்துவிடாதா என்ன? எப்படிப் பார்த்தாலும் கல்லூரிச் சிட்டாய் சிறகடிக்கும் வயதில் இருக்க வேண்டிய பெண் தானே அவள்? அவளை அத்தனை வேதனையோடு பார்த்தவன் அவள் கேட்ட கேள்வியில் துடிதுடித்துப் போனான். “ஏன்டாமா அப்படி சொல்ற?” என்று அவன் கேட்க, “என்னால முடியல முகி.. எல்லாருக்கும் பதில் சொல்லி சொல்லி ஓஞ்சுபோன மாதிரி இருக்கு..” என்றாள். “கோலையாகிட்டேனா முகி?” என்று அவள் எங்கோ வெறித்தபடி கேட்க, “இட்ஸ் ஃபைன் டு க்ரை இரா” என்று ...

விசை-12

Image
  விசை-12 அழகிய எலுமிச்சை மஞ்சள் நிறப் புடவையில், கீழே பட்டையான அடர் நீல நிறக் கரை வைத்து, அதில் தங்க நிறத்தில் யானை போன்ற ஜரிகைகள் வைக்கப்பட்ட புடவை உடுத்தி, கழுத்தில் எப்போதும் அணியும் சின்ன சங்கிலி, கையில் அடர் நீல நிறக் கண்ணாடி வளையல், காதில் அழகாய் எளிமையாய் ஒரு ஜிமிக்கி அணிந்து, அளவான கூந்தலை அழகுறப் பின்னலிட்டு, அதில் மல்லிகை மொட்டுகளைக் கொண்டு தொடுத்த பூச்சரம் சூடியிருந்தாள், இறைவி. அதே போன்ற வடிவமைப்பில் இளநீலம் மற்றும் அடர் நீலச் சேர்க்கையில் புடவை உடுத்தி, கழுத்தை ஒட்டிய சின்னத் தங்க அட்டிகை, காதில் தங்கக் குடை ஜிமிக்கி, கைகளில் கண்ணாடி வளைகளென அத்தனை அழகாய் வந்தாள், மதிவதனி. அதே போன்று வெந்தய மஞ்சள் மற்றும் அடர் பச்சைச் சேர்க்கையில் புடவை உடுத்தி தான்யா வர, மூன்று பெண்மணிகளையும் ஒன்றாய்ப் பார்க்க அத்தனை அழகாய் இருந்தது. அந்தப் புடவை மதிவதனியின் தேர்வு. தேனி மாவட்டத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலே செந்திலின் குல தெய்வக் கோவில். அம்மனுக்குப் புடவை எடுக்கச் சென்றபோது, அந்த இளநீலப் புடவையில் மதியின் கண்கள் விழுந்தது. அதன் நிறம்...