Posts

8. அந்தமற்ற ஆதரமே

Image
  அத்தியாயம்-08 தான் காண்பது கனவா இல்லை நினைவா என்று பரிதவித்த நிலையில் அடாமினா தன் முன் நிற்பவனை வெறித்து நிற்க, அவளை நம்பமுடியாதப் பார்வை பார்த்து நின்றான் ஜான் ஃபேர்லே. அவன் நினைத்தது ஒன்றாக இருக்க நடந்தது வேறாகிப்போனதே! இருவரும் தங்கள் சுற்றம் மறந்த நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அடாமினாவின் மீது நெருப்புப் பந்து ஒன்று வீசப்பட்டது.  அதில் பொத்தென அவள் கீழே விழவும் சுயம் பெற்றவன் தனக்குப் பக்கவாட்டில் திருப்பிப் பார்க்க, அடுத்தப் பந்தை வீச தன் கைகளை உயர்த்தினாள் டைஸா. "நோ டைஸா.." என்று அவளைத் தடுத்து நிறுத்தி பரிதவிப்போடு பார்த்தவன், "எ.. என் ஏஞ்சல்" என்று கண்கள் பனிந்து குரல் கரகரக்கக் கூறினான்.  அதில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற டைஸா, "அ..அடாமினா?" என்று வினவ,  ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தான். இங்கு கீழே விழுந்த அடாமியைக் கண்டு பதைபதைத்து வந்த அலாஸ்கா, "அடாமி.." என்க,  சோர்ந்த விழிகளோடு அவளை ஏறிட்டாள்.  அப்போது அவர்களை நோக்கி வந்த பனிக்கத்தியைத் தன் நெருப்பால் உருக்கிவிட்டுத் திரும்பிப் பார்த்த சைரா, "என்ன பண்றீங்க? ...

7. அந்தமற்ற ஆதரமே

Image
  அத்தியாயம்-07 பாரடைஸ் வாசிகளில் ஜோயலின் குழுவை சேர்ந்த அனைவரும் ஜோயலது மாளிகையில் கூடியிருந்தனர். அனைவரது முகத்திலும் சோகத்தின் சாயல் நிரம்பி வழிய, கண்களை மூடியபடி தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார் ஜோயல். க்ரிஃபின் அவர் அருகே வந்து ஜோயல் முகத்தோடு தன் முகத்தை இழைத்து நிகழ்வுக்குக் கொண்டுவர, கண்களை மெல்ல திறந்து அனைவரையும் ஏறிட்டார்.  தன் தொண்டையைச் செருமிக் கொண்டவர், "இன்னும் ஈரைந்து நாட்கள் கழிச்சு போர் துவங்குது. போருக்கான ஆயுத்தங்கள துவங்குங்க. எல்லாரும் ஜேஸ்புரட்க்குப் புறப்பட்டு உங்க உங்க ஆயுதங்கள எடுத்துட்டு வாங்க" என்று கூற,  அனைவரும் வலது கையினை இடது மார்பில் குற்றி மண்டியிட்டு வணங்கினர். அனைவரையும் புறப்படும்படி அவர் சைகை செய்ய, சோகமே உருவாக அங்கிருந்து புறப்பட்டனர்.  மீண்டும் அவர்களது பயிற்சி பூங்காவை அடைந்தோர் முகத்தில் இன்னமும் சோகத்தின் சாயல்… 'பாரடைஸ்' என்று பெயரிலேயே சொர்க்கத்தினை வைத்துக் கொண்ட அந்த இடம் இன்னும் சில தினங்களில் நரகமாக மாறப்போகும் அவலத்தினை எண்ணி அவர்கள் முகம் வெம்பி வெதும்பியது. 'வீல்' என்று காற்றைக் கிழிக்கும் ஓசையோட...

6.அந்தமற்ற ஆதரமே

Image
  அத்தியாயம்-06 அந்தி மாலை வேளை… சோகமே உருவாக அந்த பூங்காவில் அமர்ந்திருந்த அடாமினா, ஃபேர்லேவின் வரவிற்காகக் காத்திருந்தாள்.  'இவ்வளவு சடுதியில் எப்படி இந்த பூமியால் சுற்ற முடிந்தது? என் சக்தியைக் கொண்டு இதன் இயக்கத்தினை நிறுத்திவிட்டால் தான் என்ன?' என்று எண்ணியபடியே அமர்ந்திருந்தாள்.  கையில் பூங்கொத்துடன் வந்த ஃபேர்லேவைக் கண்டவள் விழிகள் விரிய எழுந்து நிற்க, புன்னகையுடன் கண் சிமிட்டி அவளருகே வந்தான். "ஃபே..ஃபேர்லே" என்று அவள் தடுமாற, "ஃப்ளோரா" என்றபடி அவளிடம் அந்த பூங்கொத்தினைக் கொடுத்தான்.  அதையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள், "எ..என்னது ஃபேர்லே" என்று வினவ,  "படிச்சு முடிச்சாச்சுல? வாழ்த்துக்கள்" என்றபடி அதை நீட்டினான்.  அவளையும் அறியாமல் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டபடி அவள் அதை வாங்க, ஒரு குறும்பு சிரிப்போடு அதைப் பார்த்தான். அவள் முகத்தில் மீண்டும் ஒரு சோகம்.. அதே நேரம் அவன் காதலைக் கூறிடுவானோ என்ற பதட்டம் அவளுக்கு.  "அப்றம் ப்ளோரா.. நெக்ஸ்ட் பிளான் என்ன?" என்று அவன் வினவ,  "எ.. என் சொந்த ஊருக்குப் போறேன்" என்றா...

5.அந்தமற்ற ஆதரமே

Image
  அத்தியாயம்-05 "ஹெலோ சார்.. உங்க ஆடமை வந்து வாங்கிட்டு போகமாட்டீங்களா? நீங்க இல்லாம என்னைப் படுத்தி எடுத்துடுச்சு" என்று டைஸா கூற,  "ஏ.. சாரி. மறந்துட்டேன்" என்று ஃபேர்லே கூறினான்.  "அதானே.. பார்த்தியா ஆடம்? உன்னையே மறக்குமளவு பய லவ்ல விழுந்துட்டான் போல" என்று அவனது தோழி டைஸா கூற,  சிறு வெட்கத்துடன் தன் கைநீட்டி பறவையை அழைத்துத் தலைகோதியவன், "ஷி இஸ் மை ஏஞ்சல்" என்றான். "ம்ம்.. அதான் உன் முகமே சொல்லுதே. இந்த பிரண்ட மறந்துடாதடா. நீங்க ஹேப்பியா இருக்கனும்னு ஃபர்ஸ்ட் விஷ் நான் தான்" என்று கூறிய டைஸா அறியவில்லை நடக்கவிருப்பதை! அங்கு கட்டிலில் விழுந்த அடாமினா அவனுடனான தருணங்களை மனதோடு அசைபோட்டபடியே உறங்கிப்போக, மறுநாள் காலை வெகு தாமதமாகவே எழுந்தாள்.  "என்ன மேடம் இப்பதான் தூக்கம் கலையுதோ?" என்று கேட்ட சைராவைப் பார்த்து அடித்துப் பிடித்து எழுந்தவள் மணியைப் பார்க்க அது காலை எட்டு என்று காட்டியது. "ஏ எட்டா?" என்று பதறியவள் பரபரப்புடன் கிளம்பி தயாராகி வர, "நேத்து காம்படீஷன் என்ன அச்சு அடாமி" என்று சைரா வினவினாள்.  தன...

4. அந்தமற்ற ஆதரமே

Image
  அத்தியாயம்-04 காலை நேரமதில், சைராவின் வீட்டில் அனைவரும் கூடியிருந்தனர். ஐலா, ஆலிஸ், அடாமினா, சைரா மற்றும் அலாஸ்கா ஆகியோர் அமர்ந்து கலகலத்துக் கொண்டிருக்க, அலாஸ்கா, "ஏ அடாமி.. நீ இல்லாம நல்லாவே இல்லை தெரியுமா அங்க?" என்று கூறினாள். அலாஸ்கா, சைரா மற்றும் அடாமினா தான் மிகவும் நெருக்கமானவர்கள். அதிலும் அலாஸ்காவுக்கு அடாமினா மீது ஒரு தனி பிரியம். அது பாகுபாடாக வெளிப்பட்டதில்லை என்றபோதும், அனைவருக்கும் அவளுக்கு அடாமினா மீது இருக்கும் அந்த பாசம் தெரிந்தே இருந்தது. எப்போதும் பதிலுக்கு பதில் வாயளக்கும் அடாமினா தற்போது புன்னகையோடு நிறுத்திக் கொள்ள, அலாஸ்காவுக்கு அவளது அமைதியான அந்த பரிணாமம் மெல்ல மெல்ல உரைத்தது.  அனைவரது பேச்சு வார்த்தையும் முடிவு பெறவும், "ம்ம்.. என்ன ஐலா? ரொம்ப சந்தோஷமா கிளம்பிட்ட போல?" என்று அலாஸ்கா வினவ,  "இருக்காதா பின்ன? ஆலிஸ்கூட ரொமான்ஸ் பண்ண வேண்டியவள, இப்படிப் படிக்கப்போனு லார்ட் ஜோயல் அனுப்பி வைச்சுட்டார். பாவம் அங்க ஆலிஸும் தவியா தவிச்சுட்டார், இங்க ஐலாவும் தவியா தவிச்சுட்டா" என்று சைரா கூறினாள். பாரடைஸ் வாசிகள் பூமிக்கு சென்று சக மனிதர...

3. அந்தமற்ற ஆதரமே

Image
  அத்தியாயம்-03 தன் தோள் பையின் வார் பகுதியை பதட்டத்துடன் தேய்த்தபடியே அந்த பூங்காவில் அமர்ந்திருந்த அடாமினா, 'அய்யோ.. சைராவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுடுவாளே. லார்ட் ஜேயல்.. ஏன் எனக்கு இப்படியொரு சோதனை' என்று மனதோடு புலம்ப, ஃபேர்லே அங்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் சட்டென எழுந்து நின்றவள் பதட்டம் மேலும் ஏறிவிட, இதயம் பந்தையக்குதிரையின் வேகத்தில் துடித்தது.  "ஏ நான் என்ன ப்ரொபசரா எழுந்து நிக்குறதுக்கு? சிட்டவுன் டியர் (உட்காரு அன்பே)" என்றபடி ஆடவன் அந்த கல்லிருக்கையில் அமர,  சற்று இடைவெளி விட்டுத் தானும் அமர்ந்தாள். "ஐம் ஜான் ஃபேர்லே" என்று அவன் கூற,  "ஃப்ளோ.. ஃப்ளோரா அடாமினா" என்றாள்.  "நைஸ் அன்ட் டிபரென்ட் நேம்" என்று அவன் கூற, மெல்லிய முருவலைப் பரிசாகத் தந்தாள்.  "தினமும் லைப்ரேரி வருவியே, புக்ஸ் படிக்க அவ்வளவு பிடிக்குமா?" என்று அவன் வினவ,  உள்ளுக்குள் திடுக்கிட்டவள், தன் தொண்டையைச் செருமிக் கொண்டு "அ..ஆமா. உங்களுக்கும் பிடிக்குமா?" என்று வினவினாள். "ரொம்ப பிடிக்கும். அதுவும் ஃபேன்டஸி கதைகள் தான் ரொம்ப ப...

2.அந்தமற்ற ஆதரமே

Image
  அத்தியாயம்-02 கலகலப்பான சிரிப்பொலியே அந்த இடமெங்கும் ஒலித்தது! தன் கையில் நீரை பந்துபோல் உருட்டிப் பிடித்துக் கொண்ட கார்டிலியா "அக்வா" என்றபடி அதை வீசி எறிய,  "டௌஸ் (douse)" என்று பதில் மந்திரம் போட்டு அந்த நீரை அவள் மீதே வீசியிருந்தான், ஃபோர்ட் (Ford).  நீர்ப்பந்து வந்து வீசிய வேகத்தில் இரண்டடி பின்னே சென்று வீழ்ந்தவள், "ஆஹா ஃபோர்ட்.. ஆனாலும் உங்கக் காதலி மேல உங்களுக்கு கருணையே இல்ல" என்று கூற,  வாய்விட்டு சிரித்தவன், "வேவ்" என்று மந்திரச்சொல் உதிர்த்ததில் ஓர் அலை உருவாகி அவளை தூக்கிக் கொண்டு வந்து அவனிடம் சேர்த்தது.  அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டு முத்தமிட்ட ஃபோர்ட், "காதல் மனைவி சண்டை கலைகள்ல கொஞ்சம் மக்கா இருக்காளே. அதனால பாடம் சொல்லிக் கொடுக்கும்போது கண்டிப்பு இருப்பதுல தப்பில்லை" என்று கூற,  “என் காதல் கணவர் காதலில் மக்கா இருக்காரே! அப்போ நானுமில்ல கண்டிப்பா இருக்கனும்?" என்றவள் அவன் முகம் பற்றி கன்னத்தினை அழுந்த கடித்து வைத்தாள். "ஆ.." என்றபடி அவளைக் கீழே விட்ட ஃபோர்ட் "வரவர உனக்கு விளையாட்டு கூடிபோச்சு க...