Posts

விசை-20

Image
  விசை-20 தன் கையிலுள்ள ஓவியத்தைக் கண்களில் கண்ணீரோடு பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான், கற்குவேல் அய்யனார். அவன் உடலெல்லாம் நடுங்கியது என்றாலும் மிகையில்லை… அவன் கையிலுள்ள ஓவியத்திலிருக்கும் கண்களில் தான் எத்தனை காதல்! கண்ணின் ஓரமாய் நீர்மணி ஊர்ந்து காதுமடலில் அவள் காதல் துளியைச் சேர்ப்பித்து, அவன் நாசியெனும் வீணையைத் தன்னைப்போல் துடிக்க வைத்து, இசை மீட்டியதாய், இதழ் பெருமூச்செறிந்தது. ‘இறைவி’ என்ற கையெழுத்துடன் கீழே இருந்த தேதியை வருடியவனுக்கு, கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முன்பு அவள் வரைந்த ஓவியம் அது என்று அறிந்துகொள்ள முடிந்தது. ஏன்? எப்படி? இவளை நான் எங்கு பார்த்தேன்? எப்போது பார்த்தேன்? என்னை எங்கு கண்டு எப்படி மையலுற்றாள்? என்னை எப்படி அறிந்துகொண்டாள்? எதனால் என்மீது காதல் கொண்டாள்? என்று பல கேள்விகள் அவன் மனதை வண்டாய் குடைந்தது, அவன் கையிலிருந்த அவ்வோவியம். கழுத்தில் மாலையுடனும், கண்களில் காதலுடனும் அவள் நிற்க, அவளுக்கு நேர் எதிரே, அவளைப் போலவே மாலையும் காதலுமாய் நின்றிருந்தான், கற்குவேல் அய்யனார்…. இருவரின் கண்களில் அத்தனை உயிர்ப்பு… அந்த உயிர்ப்பைக் கொடுத்தது அவ்விழிகளில் ...

விசை-19

Image
  விசை-19 ‘கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிகிச்சு..’ என்று பாடல் ஓடிக் கொண்டிருந்த மண்டபத்தில், தான் நியமித்த ஆட்களின் வேலையைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள், இறைவி. ஆம்! அவளது முயற்சியின் முதல் உயர்படியாய், அந்தத் திருமணத்தின், மண்டப அலங்காரம், ஆடை வடிவமைப்பு, உணவு பரிமாறுதல், மருதாணி போடுதல் ஆகியவை அவளின் கீழ் ஏற்பாடான ஆட்களால் நடந்துகொண்டிருந்தது. தனியாக நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் என்று அவள் தொடங்கியிருக்கவில்லை என்றாலும் கூட, தனித்தனியாகத் தான் பிடித்த ஆட்களோடு, அலங்காரம் செய்வதற்குத் தனியாக வெளியே ஆள் எடுத்து, பொருட்களை மண்டபத்தாரிடம் பெற்றுக்கொண்டு, மணமக்கள் கேட்டதன்படி தானே மண்டப அலங்காரத்தை வடிவமைத்து ஏற்பாடு செய்திருந்தாள். பெரியளவு ஆடம்பரத் தேவைகள் இல்லாததால், உணவு, உடை, அலங்காரத்துடன் முடிந்தது அந்தத் திருமணம். அது அத்தனையும் இறைவியின் கீழ் ஏற்பாடான ஆட்களால் செய்யப்பட்டது தனி சிறப்பு. அனைத்தையும் சரிபார்த்தவளிடம் வந்த மணப்பெண்ணின் தாய், “மேடைல அலங்காரம் அழகாருக்குனு வாரவக எல்லாம் சொல்லுறாக கண்ணு. ரொம்ப அழகா பண்ணிக் குடுத்துருக்க. அவ்ளோ சந்தோஷமா இருக்கு” என்று மனமாரக் கூ...

விசை-18

Image
  விசை-18 அய்யனாருக்கு உள்ளங்கையில் ஆழமான காயமும், முழங்கைக்கு மேல் உள்ள காயத்தில் தையலும் போடப்பட்டிருந்தமையால், அவனுக்கு விடுப்பு வழங்கி இருந்தனர். முகில் அவனது காயம் பற்றிய விஷயம் தெரிந்துகொண்டு பதறியடித்துச் செல்ல, அய்யனார் கட்டிலில் படுத்தபடி விட்டத்தைப் பார்த்து கனவு கண்டு கொண்டிருந்தான். அவனவள் அவனுக்காகத் துடித்த துடிப்புகள் எல்லாம் அவனுள் இன்பச் சாரல் வீசும் விதமாய்.. “அத்தான்..” என்று முகில் பல முறை அழைத்தும் கூட அவன் கனவிலிருந்து வருவதாக இல்லை. இதில் நடுநடுவே புன்னகை வேறு.. ஒருகட்டத்தில் கடுப்பாகிப்போன முகில், அவன் தொடையில் ஓங்கி அடிக்க, “அடேய்..” என்றபடி எழுந்தவன், தையல் கொடுத்த அழுத்தத்தில் முகம் சுருக்கினான். “அய்யோ அத்தான்..” என்று பதறிப்போன முகில், “என்ன அத்தான்? எப்புடி ஆச்சு? அத்தை என்னமோ அடிபட்டு வந்திருக்கீங்கனு அழுதுட்டே ஃபோன் அடிச்சாங்க..” என்று கேட்க, “ஓ.. அம்மாதான் சொன்னாங்களா?” என்று சோகம் போல் கேட்டான். “வேற யாரு சொல்லுவாக?” என்று முகில் புரியாமல் கேட்க, “என் ஆளுதான்” என்றானே பார்க்க வேண்டும்.. “உங்க ஆளா?” என்று முகில் அரண்டுபோய் விழிக்க, அவனைப் பார்த்துப்...

விசை-17

Image
  விசை-17  ஒரு வார காலம் ஓடியிருந்த நிலையில், புலர்ந்த அழகிய மாலைப் பொழுது அது. பூ அலங்காரங்களுக்கு மொத்தமாகப் பூக்கள் கொள்முதல் செய்வதைப் பற்றி ஒரு நம்பகமான வியாபாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப் போயிருந்தாள் இறைவி. அவளுக்கு அவர்களுடனான ஒப்பந்தம் மகிழ்ச்சியையே கொடுத்திருந்தது. அவள் எதிர்பார்க்கும் விலைப்பட்டியலின் கீழ், பல வகையான பூக்களை அவர்கள் விற்பனை செய்வதைத் தெரிந்துகொண்டவள் மிகுந்த மகிழ்வுடனே புறப்பட்டிருந்தாள். உற்சாகத்துடன் வந்தவள், பேருந்து நிலையத்திற்கு வந்ததும் முகிலுக்கு அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்ற முகில், “சொல்லு கேர்ள்” என்க, “முகி நான் செம்ம ஹாப்பி.. ஏன் சொல்லு” என்றாள். “என்னடா? என்ன மேட்டர்?” என்று அவன் கேட்க, “அந்த பூ டெகரேஷன்ஸ்கு ஒருத்தர்ட பேசப்போனும்னு சொல்லிட்டுருந்தேன்ல? அவங்கட்ட பேசினேன். ப்ரைஸ் அன்ட் வெரைட்டீஸ்லாம் நமக்கு ஏற்ற போல ரொம்ப அஃபார்டபிலா இருக்குதுடா” என்று கூறினாள். “ஹே சூப்பர் இரா.. செம்ம. அப்றம் என்ன? ஸ்டார்ட் பண்ணிடலாம்ல?” என்று முகில் கேட்க, “ம்ம் டா.. இன்னும் கொஞ்சம் செட் அப் பண்ணனும். பேஸ் ஸ்டிராங் ஆனதும் ஆரமிச்சடலாம்” என்றாள். அத்தனை ...

விசை-16

Image
  விசை-16 அடித்துப்பிடித்து இறைவியின் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தான், முகில்வண்ணன். அவனுக்கு அழுகையாய் வந்தது. கண்ணில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது. வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தவன் அலைபேசி அதிர, இறைவிதான் அழைப்பதோ என்று பதைபதைப்பாய், யார் அழைக்கின்றார்கள் என்றும்கூடப் பார்க்காது, “இரா.. ம்மா.. டேய்..” என்று பதறினான். அதில் இறைவிக்கு ஏதோ பிரச்சினையோ என்று அஞ்சி, “டேய் நான் வேலுடா.. என்னாச்சு?” என்று அய்யனார் கேட்க, “அ..அத்தான்..” என்றவன் உடைந்துபோய் அழுதே விட்டான். முகில் இப்படியெல்லாம் உடைந்து அழுவதை அய்யனார் பார்த்ததோ கேட்டதோ இல்லை. “டேய்.. முகில்.. என்னாச்சுடா?” என்று அய்யனார் கேட்க, “அ..அத்தான்..” என்று அழுதானே தவிர ஏதும் பேசவில்லை. “என்னாச்சு முகில்? முதல்ல நீ எங்க இருக்கனு சொல்லு” என்று அய்யனார் கேட்க, “இ..இரா வ்..வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் அத்தான்” என்றான். “என்னாச்சுடா? அ..அவளுக்கு எதும் பிரச்சினையா?” என்று அய்யனார் கேட்க, அவன் நெஞ்சம் அத்தனை பதற்றத்தை உணர்ந்தது அக்கேள்வியில். “நா..நானே என் இராவ ஹ..ஹர்ட் பண்ணிட்டேன் அத்தான்” என்று கதறலாய் மொழிந்தவன், தன் கண்ணீரை அழுந்த...

விசை-15

Image
  விசை-15 வாரம் ஒன்று கடந்திருந்தது. முன்னாள் எம்.எல்.ஏ நாதனுடன் தொடர்புடைய ஆட்களைப் பற்றிய தகவல் தேடலில் அய்யனார் மற்றும் ராஜ் இறங்கியிருந்தனர். அன்று வீட்டில் அமர்ந்து சேகரித்தக் கோப்புகளை அய்யனார் பார்வையிட்டுக் கொண்டிருக்க, அவனுக்குத் தேநீருடன் வந்த காமாட்சி, “எய்யா..” என்று அழைத்தார். அன்னையை நிமிர்ந்து பார்த்தவன் தேநீரை வாங்கி, சூடோடு அப்படியே பருக, வழமைபோல், “இம்புட்டு சூடா குடிக்கதாய்யா” என்றார். “பழகிடுச்சும்மா” என்றவன் வேலையைத் தொடரவும், அவர் மகனிடம் பேச வேண்டும் என்பதைப் போல நிற்க, தன் கையிலுள்ள கோப்பை மூடி வைத்தவனாய் அன்னையைப் பார்த்து, “என்னம்மா?” என்றான். “அ..அந்த புள்ளைகிட்ட பேசினியா எதும்?” என்று அவர் கேட்க, “உங்களுக்கு என்ன சொல்லனுமோ அதை நேரடியாவே சொல்லுங்க ம்மா” என்றவன், “நான் இன்னும் யார்கிட்டயும் சொல்லல” என்றான். அவன் முன் வந்தமர்ந்தவர், “அந்தப் புள்ளைய பிடிக்காம இல்லைய்யா.. ஆனா உன் பேரு கெட்டுப்போகுமேனுதான் யோசிச்சேன். இப்ப நீயும் இம்புட்டு எடுத்துச் சொன்னப் பொறகு..” என்றவர், அவன் தலை கோதி, “உங்கப்பாவ பாத்த கணக்காருக்கு சாமி” என்க, அவனிடம் விரிந்த புன்னகை. “என்...