Posts

Showing posts from March, 2025

வலி, வலி வழி புரியும்!

Image
 மருத்துவமனையில் கண்களில் வழியும் இன்பவெள்ளத்துடன் ஓய்ந்து படுத்துக் கிடந்தாள், தமிழினி. நினைவுகள் சில வருடங்களுக்கு முன் இதே மருத்துவமனையில் சுற்றத்தாரின் கதறலுக்குக் காரணமாக படுத்திருந்தது நினைவு வந்தது. காரணம், தான் காதலித்தவன் குணத்தில் பூஜ்ஜியம் பெற்றவன் என தெரியவந்த பின் உருவான தாங்க முடியாத வலி…  தமிழ்வேந்தன் இதழினியின் ஒற்றை வாரிசே தமிழினி. திருமணம் முடிந்து ஐந்து வருடம் குழந்தையின்றி தவித்து, ஊர் பேச்சு உலகப்பேச்செல்லாம் வாங்கி, ஏதோ ஜென்மத்தில் செய்த புண்ணியமாக பெற்ற பிள்ளையே தமிழினி.  பாசம் மொத்தமும் மகளுக்கே எனக் கொட்டிக் கொட்டி வளர்த்த மகளுக்கு நல்லொழுக்கமும் பண்புகளும் கற்றுத் தந்தே வளர்த்தனர்.  மகள் பேச்சுக்கு வீட்டில் மறுபேச்சில்லை. அவளது காதலும் அப்படியே. கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் துளிர்விட்ட காதலை மூன்றாம் ஆண்டின் இறுதியில் உணர்ந்தவள் உடனேயே அதை தன் வீட்டிலும் கூறி இருந்தாள்.  'படிப்பை முடி உன் இஷ்டம் போல் செய்கின்றோம்' என புன்னகையுடன் கூறிய பெற்றோரை கட்டியணைத்து மகிழ்ந்தாள்.  ஆனால் அன்று..! அவளது கல்லூரி வாழ்வின் இறுதியாண்டில் அவளது காத...

பக்கங்களில் ஏக்கங்கள்

Image
                      பக்கங்களில் ஏக்கங்கள்...  அந்தக் காலைப் பொழுது, வானின் இளநீல நிறம் மெல்ல மெல்ல வந்துக் கொண்டிருந்த பொழுதில், அரைகுறை உறக்கத்தில் இருந்த அகல்யாவை, வந்து எழுப்பினார், அவள் தாய் ஆதிரை.  "அடியே.. உன்னால தினம் நான் திட்டு வாங்குறேன். சீக்கிரம் எழுந்திரினு சொன்னா கேட்கவே மாட்டியா?" எனத் தாய் தன் வசவைத் துவங்க,  மிகவும் சிரமப்பட்டு எழுந்தாள்.  "அம்மா.. நான் என்ன வேணும்னா தூங்குறேன்? முடியலைமா" எனக் கூறிய மகளைப் பார்க்க,  ஆதிரைக்கு பாவமாகத் தான் இருந்தது.  "மணி ஏழு. போ" என்றுவிட்டு தனது சமையல் வேலையைப் பார்க்கச் சென்றார். எப்போதும் அவளை வாட்டும் மாதவிடாய் பிரச்சனையினால் அதிகமான அசதி ஏற்படவே, தூங்கிப் போய்விடுகிறாள். 'தொடர்ந்து சென்று பார்க்க வேண்டிய மருத்துவர் பக்கம் சென்றே ஆறு மாதம் ஆகிவிட்டது. இதில் வலியை என்ன செய்ய முடியும்?' என்ற விரக்தி அவளுக்குள்.  அகல்யா முதலாம் ஆண்டு இளநிலை, உயிரியல் பயிலும் மாணவி. ஏதேதோ படிக்க வேண்டும் என்று கனா கொண்டிருந்தவள், இன்று ஏதோ ஒன்றை படிக்க வந்துவிட...