Posts

Showing posts from November, 2025

விசை-24

Image
  விசை-24 உலகமே இருண்டு, வாழ்க்கையே முடிந்துவிட்டதைப் போல் அமர்ந்திருந்தாள் இறைவி. இருந்த இடம்விட்டு அசையக்கூடத் திராணி இல்லாதவளாய் இருந்தாள். அவள் அருகே அமர்ந்து மதி மற்றும் தான்யா சொல்லிய ஆறுதல் எல்லாம் அவள் செவியை எட்டியாதாகக்கூட அவள் காட்டிக்கொள்ளவில்லை. மரத்துப்போன அவள் உடலில், கண்கள் மட்டும் அதிவேகமாய் தன் பணி செய்து கண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தது. “யாரு வந்து கூப்டாலும் விட்ருவீங்களா? இதுதான் நீங்க ஸ்கூல் நடத்துற லட்சனமா சார்?” என்று அய்யனார் வெறி பிடித்தவன் போல் கத்த, “சார்.. அந்த பொண்ணைக் கூப்பிட ஒவ்வொரு நேரம் ஒவ்வொருத்தர் வருவாங்க. வர்ற எல்லாரையும் எப்படி எங்களால நினைவு வச்சுக்க முடியும்? சக்திகிட்ட கேட்கத்தான் செய்தோம். அவதான் தெரியும்னு சொன்னா” என்று அந்த ஆசிரியர் கூறினார். “இதென்னங்க முட்டாள்தனமான பதிலா இருக்கு? நாங்க ஒவ்வொருத்தர் வந்தாலும் ஒவ்வொரு முறையும் எங்க குடும்ப படத்தைக்காட்டி உறுதி செய்துட்டுத்தானே கூட்டிட்டுப்போறோம்? எங்க புள்ளைக்கு எதாவதுனா நீங்க பதில் சொல்லுவீங்களா?” என்று முகில் கத்தி சப்தமிட, பள்ளி முதல்வருக்கு விழி பிதுங்கியது. “என் புள்ளை எனக்கு வேணுங்...

விசை-23

Image
  விசை- 23 “அப்பத்தாட்ட என்னத்த சொல்லி வச்சீங்க?” என்று இறைவி கேட்க, “என்னத்த சொல்றாங்க?” என்றான். “ப்ச்.. விளையாடாம சொல்லுங்க. அவங்க ஏன் போலீஸ் தம்பி பாப்பாவைக் கூட்டிட்டு வந்து விடுறாங்கனும் என்னமோலாம் சொல்றாங்கனும் கேட்குறாங்க” என்று அவள் கூற, “பாருடா.. எனக்கு அவ்வளவு பெரிய அக்காவா?” என்று சிரித்தான். “பாக்க எப்பப்பாரு உர்ருனே இருப்பீங்க.. இப்படி எல்லாம் பேசுவீங்களானு இருக்கு” என்று அவள் முனுமுனுக்க, “நீ பார்த்தது காவல்காரன் கற்குவேல் அய்யனாரைடி.. நான் உன்னோட காதல்காரன் அய்யனார்” என்று கண்ணடித்தபடி மகிழுந்தின் திசைமாற்றியை லாவகமாய் திருப்பினான். “நான் இன்னும் பாட்டிகிட்ட சொல்லலை” என்று அவள் சிரம் தாழ்த்திக் கூற, “வா, ஒன்னாவே சொல்லுவோம்” என்றான். “இல்ல.. நான் முதல்ல சொல்றேன்.. மறுக்க மாட்டாங்க.. ஆனா இத்தனை வருஷமா சொல்லலையேனு கேப்பாங்க” என்று அவள் கூற, “அதுசரி.. அடிக்கடி உனக்கு வயசு கம்மினு நினைவு செய்யணும்போலேயே.. இப்ப நீ போய்ச் சொன்னாலும்கூட உன்னைக் கல்யாணம் பண்ணிக்குற யோசனைல நான் இல்லை” என்று கூறினான். “ஏன்?” என்று அவசரமாய்க் கேட்டவள், குறும்புப் புன்னகை மின்னும் அவன் முகத்தைக்...

விசை-22

Image
  விசை- 22 “இவ்வளவு ப்ரீ பிளான்டா பண்றவனுங்க இந்த விஷயத்துல கோட்டை விடுறது ரொம்ப வித்தியாசமா இருக்கு ராஜ்” என்று அய்யனார் கூற, “ஏன் சார்? அவன்மேல நம்பிக்கை வரலையா?” என்று ராஜ் கேட்டான். தன் தாடையை நீவிக் கொண்ட அய்யனார், “தெரியல.. ஏதோ வித்தியாசமா இருக்கு” என்று அய்யனார் கூற, ராஜ் என்ன கூறுவதென்றே தெரியாமல் விழித்தான். அய்யனார் வேலையில் சேர்ந்து சில தினங்களிலேயே அவனை வெட்ட அனுப்பப்பட்ட ஆளை, இருவருமாகத் தேடிக் கண்டுபிடித்திருந்தனர். பத்து நாட்கள் அவனைப் படாத பாடு படுத்தியும், யார் கூறி இச் செயலைச் செய்தோம் என்று அவன் வாய் திறக்கவில்லை. முந்தைய நாள், பட்டினியால் பசி பொறுக்க இயலாது கதறியவன் முன், உணவுப் பொட்டலத்தை வைத்தான், அய்யனார். அத்தனை அவசர அவசரமாக அதனைப் பிரித்தவன், ஒரு வாய் உணவை அள்ளி வைக்க, மீண்டும் பொட்டலத்தை எடுத்து அவன் கைக்கு எட்டாத தொலைவில் வைத்தான். பட்டினியோடே இருந்த கொடுமையை விட, பட்டினிக்கு முடிவு கட்டும் விதமாய் உள்ளே சென்ற ஒரு வாய் உணவு கொடுத்த பூரிப்பு, உடனே மடிந்துபோனதால் உருவான எரிச்சலும் கோபமும் கண்ணீராய்த் திரண்டு எழுந்தது. “சார்.. விட்ருங்க சார்.. என்னால முடியலை...

விசை-21

Image
  விசை-21 ஒரு அழகிய திருமண மண்டபத்திற்குப் பின்னிருக்கும் வயல்வெளி போன்ற அமைப்பில், கிணற்றுத் திண்டில் சாய்ந்து, தனது கைப்பையின் வார் பகுதியைத் தேய்த்துக் கொண்டிருந்தாள், இறைவி. அவளுக்கு முன்னிருந்த தென்னைமரத்தின் மீது சாய்ந்து நின்றுகொண்டிருந்தான், கற்குவேல் அய்யனார். இருவரும் வந்து அரைமணி நேரம் ஆனது. ஆனால் இன்னும் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. என்ன பேசவேண்டும் என்றுகூட இருவருக்குமே புரியாத நிலைதான்.. நேரம் கடப்பதை உணர்ந்தவள், “பா..பாப்பாவைக் கூப்பிடப் போனும்.. சி.. சீக்கிரம் பேசலாமே” என்று திணறலாய்க் கூற, அவளைத் தனது அழுத்தமான அடிகள் வைத்து நெருங்கினான். அவன் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், அவள் இதயத்தின் துடிப்பு, தாளம் தப்பி இசைத்தது. அவளையும் மீறி அடைபட்ட மூச்சை வாய் வழியே வெளியேற்றியவளாய்த் தலை கவிழ்ந்தாள். ‘எந்த இடத்தில் தன்னைக் கண்டுகொண்டார்? தானும் காதலிப்பதை தெரிந்துகொண்டுதான் காதலித்தாரா? இல்லை அவராகத் தன்னை விரும்பினாரா?’ என்று பல கேள்விகள் அவள் மனதில். ஏனோ அவளே அறியாத ஒருவித பயம் அவளைச் சூழ்ந்தது. அதன் காரணமும் புரியவில்லை.. கைகள் நடுங்கின. நடுநடுங்கும் அவள் கரத்தைக...

விசை-20

Image
  விசை-20 தன் கையிலுள்ள ஓவியத்தைக் கண்களில் கண்ணீரோடு பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான், கற்குவேல் அய்யனார். அவன் உடலெல்லாம் நடுங்கியது என்றாலும் மிகையில்லை… அவன் கையிலுள்ள ஓவியத்திலிருக்கும் கண்களில் தான் எத்தனை காதல்! கண்ணின் ஓரமாய் நீர்மணி ஊர்ந்து காதுமடலில் அவள் காதல் துளியைச் சேர்ப்பித்து, அவன் நாசியெனும் வீணையைத் தன்னைப்போல் துடிக்க வைத்து, இசை மீட்டியதாய், இதழ் பெருமூச்செறிந்தது. ‘இறைவி’ என்ற கையெழுத்துடன் கீழே இருந்த தேதியை வருடியவனுக்கு, கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முன்பு அவள் வரைந்த ஓவியம் அது என்று அறிந்துகொள்ள முடிந்தது. ஏன்? எப்படி? இவளை நான் எங்கு பார்த்தேன்? எப்போது பார்த்தேன்? என்னை எங்கு கண்டு எப்படி மையலுற்றாள்? என்னை எப்படி அறிந்துகொண்டாள்? எதனால் என்மீது காதல் கொண்டாள்? என்று பல கேள்விகள் அவன் மனதை வண்டாய் குடைந்தது, அவன் கையிலிருந்த அவ்வோவியம். கழுத்தில் மாலையுடனும், கண்களில் காதலுடனும் அவள் நிற்க, அவளுக்கு நேர் எதிரே, அவளைப் போலவே மாலையும் காதலுமாய் நின்றிருந்தான், கற்குவேல் அய்யனார்…. இருவரின் கண்களில் அத்தனை உயிர்ப்பு… அந்த உயிர்ப்பைக் கொடுத்தது அவ்விழிகளில் ...

விசை-19

Image
  விசை-19 ‘கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிகிச்சு..’ என்று பாடல் ஓடிக் கொண்டிருந்த மண்டபத்தில், தான் நியமித்த ஆட்களின் வேலையைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள், இறைவி. ஆம்! அவளது முயற்சியின் முதல் உயர்படியாய், அந்தத் திருமணத்தின், மண்டப அலங்காரம், ஆடை வடிவமைப்பு, உணவு பரிமாறுதல், மருதாணி போடுதல் ஆகியவை அவளின் கீழ் ஏற்பாடான ஆட்களால் நடந்துகொண்டிருந்தது. தனியாக நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் என்று அவள் தொடங்கியிருக்கவில்லை என்றாலும் கூட, தனித்தனியாகத் தான் பிடித்த ஆட்களோடு, அலங்காரம் செய்வதற்குத் தனியாக வெளியே ஆள் எடுத்து, பொருட்களை மண்டபத்தாரிடம் பெற்றுக்கொண்டு, மணமக்கள் கேட்டதன்படி தானே மண்டப அலங்காரத்தை வடிவமைத்து ஏற்பாடு செய்திருந்தாள். பெரியளவு ஆடம்பரத் தேவைகள் இல்லாததால், உணவு, உடை, அலங்காரத்துடன் முடிந்தது அந்தத் திருமணம். அது அத்தனையும் இறைவியின் கீழ் ஏற்பாடான ஆட்களால் செய்யப்பட்டது தனி சிறப்பு. அனைத்தையும் சரிபார்த்தவளிடம் வந்த மணப்பெண்ணின் தாய், “மேடைல அலங்காரம் அழகாருக்குனு வாரவக எல்லாம் சொல்லுறாக கண்ணு. ரொம்ப அழகா பண்ணிக் குடுத்துருக்க. அவ்ளோ சந்தோஷமா இருக்கு” என்று மனமாரக் கூ...