விசை-20
விசை-20 தன் கையிலுள்ள ஓவியத்தைக் கண்களில் கண்ணீரோடு பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான், கற்குவேல் அய்யனார். அவன் உடலெல்லாம் நடுங்கியது என்றாலும் மிகையில்லை… அவன் கையிலுள்ள ஓவியத்திலிருக்கும் கண்களில் தான் எத்தனை காதல்! கண்ணின் ஓரமாய் நீர்மணி ஊர்ந்து காதுமடலில் அவள் காதல் துளியைச் சேர்ப்பித்து, அவன் நாசியெனும் வீணையைத் தன்னைப்போல் துடிக்க வைத்து, இசை மீட்டியதாய், இதழ் பெருமூச்செறிந்தது. ‘இறைவி’ என்ற கையெழுத்துடன் கீழே இருந்த தேதியை வருடியவனுக்கு, கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முன்பு அவள் வரைந்த ஓவியம் அது என்று அறிந்துகொள்ள முடிந்தது. ஏன்? எப்படி? இவளை நான் எங்கு பார்த்தேன்? எப்போது பார்த்தேன்? என்னை எங்கு கண்டு எப்படி மையலுற்றாள்? என்னை எப்படி அறிந்துகொண்டாள்? எதனால் என்மீது காதல் கொண்டாள்? என்று பல கேள்விகள் அவன் மனதை வண்டாய் குடைந்தது, அவன் கையிலிருந்த அவ்வோவியம். கழுத்தில் மாலையுடனும், கண்களில் காதலுடனும் அவள் நிற்க, அவளுக்கு நேர் எதிரே, அவளைப் போலவே மாலையும் காதலுமாய் நின்றிருந்தான், கற்குவேல் அய்யனார்…. இருவரின் கண்களில் அத்தனை உயிர்ப்பு… அந்த உயிர்ப்பைக் கொடுத்தது அவ்விழிகளில் ...