Posts

Showing posts from December, 2025

விசை-32 (இறுதி அத்தியாயம்)

Image
  விசை-32 நான்கு வருடங்களுககுப் பிறகு… “இதுக்குத்தான் அத்தனை முறை சொன்னேன். இறைவிகிட்ட கான்டிராக்ட் தரவேணாம்னு. எங்க கேட்குறீங்க நீங்க?” என்று மதி சப்தம் போட, அவள் திட்டுகளையெல்லாம் ஒரு பொருட்டாய் எடுக்காமல், அவள் காலடியில் அமர்ந்து அவள் புடவை மடிப்புகளை சீர் செய்துக் கொண்டிருந்தான், முகில்வண்ணன். “கொஞ்சமாது என் பேச்சைக் கேட்குறீங்களா மாமா? பாருங்க.. இன்னும் அவ வரலை. வேலை வேலைனு ஓடுறா” என்று மதி மேலும் சண்டை பிடிக்க, மெல்ல எழுந்து நின்றவன், அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டு, அவள் கன்னத்தில் முத்தமிட்டான். “எ..எனக்கொன்னும் வேணாம்” என்று அவள் கன்னத்தைத் துடைத்துக் கொள்ள, மீண்டும் ஒரு முத்தம் வைத்தான். மீண்டும் அவள் துடைத்துக் கொள்ள, “வேணாம்னா போ” என்றபடி முன்னே வந்து, மண்டியிட்டு அவள் மனிவயிற்றில் முத்தம் வைத்தான். அவள் மணிவயிற்றில் துயிலிருக்கும் குழந்தை எட்டி உதைக்கவும், அவனை முறைத்துப் பார்த்தவள், “என் புள்ளைக்கும் வேணாமாம்” என்க, பக்கென்று சிரித்த முகில், “அவன் பதிலுக்கு அப்பாவ செல்லமா தட்டித்தரான்டி.. உனக்குத் தெரியாது அதெல்லாம்” என்றான். “ஆமா ஆமா.. எனக்குத் தெரியாது” என்று அ...

விசை-31

Image
  விசை-31 அரங்கம் அதிர பாட்டுச் சத்தம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. “மதி அத்தே.. எனக்கு இது இல்ல. அந்த க்ரீன் செயின் போட்டு விடுங்க. அம்மாவும் நானும் அப்பத்தான் மேட்சிங் மேட்சிங் இருப்போம்” என்று சக்தீஸ்வரி கூற, பச்சைப் பட்டுடுத்தி மதுரை மீனாட்சியைப் போல் தயாராக இருந்த இறைவி, மகளைக் கண்டு புன்னகைத்தாள். “சரிடி அழகுராணி” என்று அவள் குண்டு கன்னங்களில் முத்தம் வைத்துக் கொஞ்சிய மதி, அவள் கேட்ட சங்கிலியை அணிவித்து அலங்காரம் செய்து முடிக்க, “பொண்ணு ரெடியாங்க?” என்று கேட்டபடி முகில்வண்ணன் உள்ளே வந்தான். வந்தவன், அழகிய சிவப்பு நிறப் புடவையில் அம்மன் சிலைபோல் நின்றுகொண்டிருந்த தன்னவளின் அழகில், அப்படியே உறைந்து போய் நின்றுவிட, “எந்த பொண்ணு கேக்குறீங்க முகி மாமா? நாங்க எல்லாம் ரெதி” என்று கண்கள் சிரிக்கக் கூறி அவனை நிகழ்வுக்கு இழுத்து வந்தாள், சக்தி. அவன் பார்வையில் தன் சேலைக்கு நிகராய் முகம் சிவந்து நின்ற மதியைப் பார்த்து, கலுக்கென்று சிரித்த இறைவி, “டேய்.. இன்னிக்கு பொண்ணு நான்தான்டா” என்க, கனவில் மிதந்துகொண்டிருந்த இருவரும் நிகழ்வுக்கு வந்தனர். “ஹே.. இ..இறைவி. நான் உன்னைத்தான் கேட...

விசை-30

Image
  விசை-30 நாட்கள் தென்றலாய்ப் படர்ந்து, மாதங்களாய்க் கடந்து, வருடங்களாய் வளர்ந்து, கடந்திருந்தது… “வேணாம்.. அந்தத் தேதி எனக்கு ஒத்து வராது..” என்று இறைவி கூற, “எதுதான்டி உனக்கு ஒத்து வரும்? இப்ப இது ஏன் வேணாம்னு சொல்ற?” என்று கேட்டான், அய்யனார். “ப்ச்..” என்று அவள் சலித்துக் கொள்ள, அவனுக்குச் சிரிப்பு வந்தது. “பார்த்த மூணு நல்ல நாள்ல, ஒரு நாள் கல்யாண ஆர்டர் வந்துருக்குனு சொல்லிட்ட.. ரொம்ப வேண்டப்பட்டவங்கனு சொன்னியேனு விட்டுட்டேன்.. இன்னொரு டேட் சொன்னதுக்குப் பரிட்சை இருக்குனு சொல்லிட்ட. சரினு அதுவும் விட்டுட்டேன்.. அடுத்த டேட்ல பாப்புக்குப் பரிட்சைனு சொல்லிட்ட.. சரினு அதையும் விட்டுட்டேன்.. இப்ப இந்தத் தேதிக்கு என்ன?” என்று அய்யனார் கேட்க, “உங்கள யாரு செமஸ்டர் வரும் மாசத்தைப் பார்த்துக் குறிக்கச் சொன்னது?” என்று கோபம் போல் கேட்டாள். அதில் புன்னகைத்துக் கொண்டவன், “அம்மா இந்த மாசமே வைக்கணும்னு சொல்றாங்களே இறைவி..?” என்று கேட்க, “அத்தைக்காகத்தான் நானும் உங்களைப் போனா போகுதுனு விடுறேன்..” என்றாள். “கடைசிவரை காரணத்தைச் சொல்ல மாட்டியே நீ?” என்று அவன் கேட்க, “எனக்குப் பீரியட்ஸ் டேட்..” என...

விசை-29

Image
  விசை-29 தனது அலைபேசியில் இறைவி இருக்கும் இடத்தைக் கண்காணித்தபடியே சென்றவன், ஒரு பேருந்து நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தினான். கூரைக்கு அடியில், முற்றும் நனைந்த நிலையில், தனது ஈரத் துப்பட்டாவையே போர்த்திக் கொண்டு, கொஞ்சம் பயத்தோடும், பதட்டத்தோடும் நின்றுகொண்டிருந்த இறைவி, முகிலின் வண்டியைக் கண்டதும் ஆசுவாசம் ஆனாள். உள்ளிருந்து குடையோடு வெளியே வந்த அய்யனார், அவளை முறைத்தபடியே வந்து, “ஃபோன் பண்றேன்ல அத்தனை முறை? எடுத்து பேச என்னடி உனக்கு?” என்று கடிந்துகொள்ள, அந்த கோபத்தில் உணரப்பெற்ற அக்கறை அவள் உள்ளமெங்கும் தித்திப்பாய் தித்தித்தது. “பதறிட்டு வரேன் என்னவோ ஏதோனு.. ஒரு கால் அட்டென்ட் பண்ணி பத்திரமா இருக்கேன்னு சொன்னா என்ன?” என்று அய்யனார் கேட்க, “ஃபோன் கீழ விழுந்துடுச்சு.. டிஸ்ப்ளே வேலை செய்யலை. அதான் உங்க கால் அட்டென்ட் செய்ய முடியலைப்பா” என்றவள், “அதான் சாயங்காலம் லேட் ஆகவுமே உங்களுக்கு லொகேஷன் அனுப்பி வச்சிருந்தேன்ல?” என்று கேட்டாள். “இருக்கட்டும்.. வேற யார்கிட்டயாவது வாங்கிப் பேசிருக்கலாம்ல?” என்றபடி, அவள் தோள் பையை வாங்கிக் கொண்டவன், “பயந்துட்டேன் இறைவி” என்று கூற, அவள் இதழில் ம...

விசை-28

Image
  விசை-28 ஒரு வார காலம் ஓடியிருந்த நிலையில், நீதிமன்ற வாசலில், அத்தனை திமிரோடும், துணிவோடும் நின்றுகொண்டிருந்தான், கற்குவேல் அய்யனார். அவன் கண்களில் அப்படியொரு தீட்சண்யம் குடியிருந்தது. அந்தத் திமிரும் துணிவும், வெற்றிக் கொடுத்த சன்மானம் என்பதில் ஆச்சரியமே இல்லை. அவனுக்கு முன், அத்தனை ஊடகவியலாளர்களும் சூழ்ந்திருக்க, “ஊடகங்களில் பேசப்படாத, அறியப்படாத ஒரு குற்றத்தை, எப்படி சார் இத்தனை சீக்கிரம் முடிச்சு வச்சீங்க?” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்க, கண்கள் மட்டும் சிரிக்க, இறுகப் பூட்டிய இதழோடு அனைவரையும் தனது கூர்மையான பார்வையால், பார்த்துக் கொண்டான். சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த ராஜை முறைத்து, அருகே கண்களால் அவன் அழைக்க, ராஜ் சற்றுத் தடுமாறினான். “இந்தக் கேஸை நான் மட்டுமா முடிக்கலை. இதுல மிஸ்டர் ராஜுக்கும் பங்கு இருக்கு. அவர் எனக்கு உதவினார்னு சொன்னால்கூட தகாது. ஏன்னா, உதவின்னு சிறு பங்கோட அவரோட பாங்கை அடக்கிட முடியாது” என்று கூறி, தற்போது ராஜை அழைக்க, சற்று சங்கோஜத்தோடு அவன் அருகே வந்து நின்றான். “இந்தக் கேஸ் பற்றித் தெளிவா கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ண முடியுமா சார்?” என்று ஒரு பெண் கே...