Posts

Showing posts from December, 2025

விசை-29

Image
  விசை-29 தனது அலைபேசியில் இறைவி இருக்கும் இடத்தைக் கண்காணித்தபடியே சென்றவன், ஒரு பேருந்து நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தினான். கூரைக்கு அடியில், முற்றும் நனைந்த நிலையில், தனது ஈரத் துப்பட்டாவையே போர்த்திக் கொண்டு, கொஞ்சம் பயத்தோடும், பதட்டத்தோடும் நின்றுகொண்டிருந்த இறைவி, முகிலின் வண்டியைக் கண்டதும் ஆசுவாசம் ஆனாள். உள்ளிருந்து குடையோடு வெளியே வந்த அய்யனார், அவளை முறைத்தபடியே வந்து, “ஃபோன் பண்றேன்ல அத்தனை முறை? எடுத்து பேச என்னடி உனக்கு?” என்று கடிந்துகொள்ள, அந்த கோபத்தில் உணரப்பெற்ற அக்கறை அவள் உள்ளமெங்கும் தித்திப்பாய் தித்தித்தது. “பதறிட்டு வரேன் என்னவோ ஏதோனு.. ஒரு கால் அட்டென்ட் பண்ணி பத்திரமா இருக்கேன்னு சொன்னா என்ன?” என்று அய்யனார் கேட்க, “ஃபோன் கீழ விழுந்துடுச்சு.. டிஸ்ப்ளே வேலை செய்யலை. அதான் உங்க கால் அட்டென்ட் செய்ய முடியலைப்பா” என்றவள், “அதான் சாயங்காலம் லேட் ஆகவுமே உங்களுக்கு லொகேஷன் அனுப்பி வச்சிருந்தேன்ல?” என்று கேட்டாள். “இருக்கட்டும்.. வேற யார்கிட்டயாவது வாங்கிப் பேசிருக்கலாம்ல?” என்றபடி, அவள் தோள் பையை வாங்கிக் கொண்டவன், “பயந்துட்டேன் இறைவி” என்று கூற, அவள் இதழில் ம...

விசை-28

Image
  விசை-28 ஒரு வார காலம் ஓடியிருந்த நிலையில், நீதிமன்ற வாசலில், அத்தனை திமிரோடும், துணிவோடும் நின்றுகொண்டிருந்தான், கற்குவேல் அய்யனார். அவன் கண்களில் அப்படியொரு தீட்சண்யம் குடியிருந்தது. அந்தத் திமிரும் துணிவும், வெற்றிக் கொடுத்த சன்மானம் என்பதில் ஆச்சரியமே இல்லை. அவனுக்கு முன், அத்தனை ஊடகவியலாளர்களும் சூழ்ந்திருக்க, “ஊடகங்களில் பேசப்படாத, அறியப்படாத ஒரு குற்றத்தை, எப்படி சார் இத்தனை சீக்கிரம் முடிச்சு வச்சீங்க?” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்க, கண்கள் மட்டும் சிரிக்க, இறுகப் பூட்டிய இதழோடு அனைவரையும் தனது கூர்மையான பார்வையால், பார்த்துக் கொண்டான். சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த ராஜை முறைத்து, அருகே கண்களால் அவன் அழைக்க, ராஜ் சற்றுத் தடுமாறினான். “இந்தக் கேஸை நான் மட்டுமா முடிக்கலை. இதுல மிஸ்டர் ராஜுக்கும் பங்கு இருக்கு. அவர் எனக்கு உதவினார்னு சொன்னால்கூட தகாது. ஏன்னா, உதவின்னு சிறு பங்கோட அவரோட பாங்கை அடக்கிட முடியாது” என்று கூறி, தற்போது ராஜை அழைக்க, சற்று சங்கோஜத்தோடு அவன் அருகே வந்து நின்றான். “இந்தக் கேஸ் பற்றித் தெளிவா கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ண முடியுமா சார்?” என்று ஒரு பெண் கே...

விசை-27

Image
  விசை-27 நேரே தனது வீட்டிற்குத் திரும்பிய அய்யனார், காமாட்சியிடம் நடந்தவற்றை எல்லாம் கூறி பயமுறுத்தாமல், வேலை பளுவால் வர முடியாமல் போனதென்று கூறினான். குளித்து வெள்ளைச் சட்டையும் காக்கி நிறக் கால்சட்டையும் போட்டுக் கொண்டு, புறப்படவிருந்தவனை, “கண்ணெல்லாம் இருண்டு கிடக்குதேப்பா.. செத்த தூங்கி எழுந்து போலாம்ல?” என்க, “நான் தூங்கி எழுந்துட்டுத்தான் வரேன் ம்மா. எல்லாம் தெளிவா பிறகு சொல்றேன்” என்றவனாய், “நீங்க வெளிய எங்கேயும் போகாதீங்கம்மா. என்னைத்தவிர யார் வந்தாலும் கதவைத் திறக்க வேண்டாம். நான் வெளிய அண்ணாகிட்ட சொல்லிட்டுப் போறேன். எதுவும் வேணும்னா அவர்கிட்ட சொல்லிவிடுங்க” என்றான். “என்னாச்சு வேலா? ஏதும் பிரச்சினையா?” என்று பயம் கலந்த குரலில் அவர் கேட்க, தன் மேலுதட்டைக் கடித்துக் கொண்டவன், சட்டென முகிலுக்கு அழைத்திருந்தான். அழைப்பை ஏற்றவன், “அத்தான்” என்று அழைக்க, “முகில்.. ஒரு உதவிடா.. அம்மாவை வந்து கூட்டிட்டுப் போறியா?” என்றான். “தாராளமா வரேன் அத்தான். ஏதும் பிரச்சினையா?” என்று முகில் கேட்க, அன்னையிடமிருந்து சற்றே நகர்ந்து சென்றவன், “கொஞ்சம்.. பாப்பாவைக் கடத்திட்டுப் போனது நான் பார்க...

விசை-26

Image
விசை-26 ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மெல்ல மெல்ல துயில் கலைந்தனர், இறைவி மற்றும் அய்யனார். இருவருக்கும் இடையே சக்தீஸ்வரி பாதுகாப்பாய் உறங்கிக் கொண்டிருக்க, இருவரின் கரங்களும் அவளை அரவணைத்திருந்தன. தன் ஒரு கரத்தை இருவருக்கும் தலையணையாக்கியிருந்த அய்யனார், மற்றைய கரத்தால் இருவரையும் தன்னோடு சேர்த்து அணைந்திருந்தான். மெல்ல கண் விழித்த இறைவி, உறங்கும் மகளையே வைத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் மூச்சுக்காற்று அவள் மார்போடு மோதி, அவளது இருப்பை உணர்த்துவதில், மனதோடு நிம்மதி உருவாகுவதை அவளால் உணர முடிந்தது. விழியில் மெல்லிய நீர் கோர்த்துக் கொள்ள, அவள் இல்லாத அந்த ஒரு நாளின் சூனியம் தன்னை எத்தனை பாதித்துவிட்டது என்பதை உணர்த்தாள். சக்தி அவள் மணிவயிற்றில் உதித்ததால் தான் அவள் வாழ்வே தடம் மாறியது… அவள் பெற்றோரால் வெறுக்கப்பட்டு, அவமானப்பட்டு, சுற்றத்தாரால் தினம் தினம் வதைபட்டுக்கொண்டும் இருக்கின்றாள். ஆனால் அவள் அளவில் சக்தியால் மட்டுமே அவள் வாழ்வு வசந்தம் பூசியதென்பதல்லவா? இல்லையெனில் ஏதேனும் ஒரு பொய்யைக் கூறி முதியவனுக்கோ, குடிகாரனுக்கோ தன்னைக் கல்யாணம் செய்து வைத்திருப்பர் ...

விசை-25

Image
  விசை-25 முகில் மூலமாக விவரம் அறிந்து வீட்டுக்கு வந்த அய்யனார், பித்து பிடித்தவள் போல் அமர்ந்திருக்கும் இறைவியைக் கண்டு மனதால் மடிந்து போனான். அவளுக்கும் தான் என்ன செய்வதென்றே புரியவில்லை. கூடத்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் முன் வந்து மண்டியிட்டு அமர்ந்தவன் மற்றவர்களைப் பார்க்க, அவன் பார்வை உணர்ந்து அனைவரும் எழுந்து சென்றனர். அனைவரும் தன் கண்ணிலிருந்து மறையும் வரை பொறுமை காத்தவன், அவர்கள் சென்றதும், “இறைவி..” என்று காற்றுக்கும் நோகாத குரலில் அழைக்க, முட்டுகளுக்கு இடையில் முகம் புதைத்து அமர்ந்திருந்தவள் மிக மெல்லமாய் நிமிர்ந்து பார்த்தாள். சோர்வும் வேதனையும் போட்டிப்போட்டு எம்பி குதித்தது அவள் முகத்தில். ‘என்னால தான?’ என்று அவன் மனம் படும் பாடைச் சொல்ல, எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை… இனிமையான தமிழில், மனம் கனிந்து அழைக்கும் அவள் பெயர் கூட இன்று கனத்து தொண்டையை அடைத்தது அவனுக்கு. “ம்மா..” என்று குரல் கமர அவன் அழைக்க, அவனையே வெறித்து பார்த்தாள். “இ..இறைவி..” என்று அவன் தடுமாறித் தடம்மாற, “நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது.. எனக்கு என் பொண்ணு வேணும்..” என்று மிக அழுத்தமா...