விசை-09
விசை-09 “அத்தான்.. அவசரமா வேலை வந்துடுச்சு எனக்கு ஒரு ஒதவி செய்றீங்களா?” என்று முகில், அய்யனார் அழைப்பை ஏற்றதும் கூறியிருக்க, “சொல்லுடா. என்னாச்சு?” என்றான். “அத்தான்.. அங்க மில்லுல ஏதோ வர்கர்ஸ் குள்ள சண்டை” என்று அவன் முடிக்கும் முன், “நா வரவா?” என்று அய்யனார் கேட்க, “இல்ல இல்ல அத்தான். அத நானே பாத்துப்பேன். பள்ளிக்கூடத்துக்குப் போய் புள்ளைகல கூட்டிவரனும்” என்றான். “அவ்ளோ தானா? எப்படா போகனும்?” என்று அய்யனார் கேட்க, “நாலு மணிக்கு விட்ருவாக. இப்ப நீங்க கிளம்பினா சரியாருக்கும். நம்ம தர்ஷனயும் பாப்பாவையும் கூட்டி வரனும். இராவும் வேலையா போயிருக்கா. புள்ளைய கூட்டிட்டு வர சொல்லிருந்தா” என்று முகில் கூறினான். “பாப்பா யாருடா?” என்று அய்யனார் புரியாது கேட்க, “ஸ்ஸ்..” என்று தலையில் தட்டிக் கொண்டவன், “என் பிரெண்டு சொல்வேன்ல அத்தான்? இறைவி. அவளோட பொண்ணு சக்தி” என்று கூறினான். “சரிடா. எப்படியிருப்பா? தர்ஷ் கிட்ட கேட்டா சொல்லுவான்ல?” என்று அவன் கேட்க, “ரெண்டும் ஒன்னாத்தான் வருமுங்க அத்தான்” என்றான். “சரி நீ பாத்து போ. எதாதுனா கூப்பிடு” என்று அய்யனார் அவனுக்கு ஆயிரம் பத்திரம் கூற, புன்னகையாய்,...