Posts

Showing posts from May, 2025

திருப்பம்-50

Image
 திருப்பம்-50 நேரம் அதன் இசைவில் நகர, மாலை வேளை திரிபுரா வந்து சேர்ந்தாள். அவள் வந்தாளே தெய்வாவிற்கும் சங்கமித்ராவிற்கும் இடையே கலவரம் மூண்டுவிடுவது வலமை என்பதால், சங்கமித்ரா ஒருவித படபடப்புடனே இருந்தாள். நாளும் பொழுதும் கடக்கும் சிறுசிறு சண்டைகளும் கூட, திரிபுரா இருந்தால் பூதாகரமாய் அமையும். அதனாலேயே வாக்குவதாங்களைத் தவிர்த்திடும் முனைப்போடு அமைதியாக இருந்தாள் பெண். திரிபுராவைப் பார்த்ததும் அவிநாஷின் குறுஞ்செய்தி நினைவு வந்தோனாய், “அக்கா நாளைக்கு ரெடியாயி இங்கன வந்துடு. எல்லாம் ஒன்னா போயிடலாம்” என்று வளவன் கூறினான். “நான் வரலலே. நீங்க போயி வாங்க” என்று திரிபுரா கூற, “அன்..மைணி ஏன் மைணி? நீங்களும் வாங்க” என்று சங்கமித்ரா கூறினாள். அவள் வரவில்லை என்றதும், பரபரப்பாய் அழைத்தவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தான் எதாவது பேசி அவர் எதாவது தவறாக புரிந்துகொள்வாரோ? என்ற அச்சத்தில் என்ன பேசுவதன்று தெரியாது விழித்தாள். இதில் அண்ணிக்கும் மைணிக்கும் இடையான தடுமாற்றம் வேறு வந்து தொலைத்தது.  “இல்லத்தா.. நீங்க போய் வாங்க” என்று திரிபுரா கூற, “அக்கா நீயா ஏதும் நெனச்சுக்காதக்கா. அண்ணே எனக்க...

திருப்பம்-49

Image
 திருப்பம்-49 உவர் காற்றின் இதம் அவள் தேகமெங்கும் தீண்டிச் செல்ல, அதை கண்கள் மூடி ரசித்தபடியே தன்னைச் சுற்றியிருக்கும் கடலை ரசித்து அதன் ஓசையைக் காதின் வழி மூளையில் நிறப்பிக் கொண்டிருந்தாள், சங்கமித்ரா. இயற்கை அன்னையை ரசித்துக் கொண்டிருந்த அவளது அழகிய விழிகளை, மறவோனது விழிகள் ரசித்துக் கொண்டிருந்தது. உற்றாகம் பொங்கும் அந்த விழிகளில், அவள் உணரும் உவகையை காணும் நொடி, அவன் உணரும் சந்தோஷத்தையும், கண்ணீர் ததும்பிநின்று, சிவப்பேறி துடிக்கும், வலிகளை விழுங்கிய அவள் விழிகளைக் காணும் நொடி, அவன் உணரும் வேதனையையும் ஒப்பிட்டுப் பார்த்தவனுக்கு உள்ளத்தில் சொல்லொண்ணா உணர்வு. தன்னை வான்புகழுக்கே ஒப்புவித்த வள்ளுவனின் சிலைக்கடியில் நின்றிருப்பதாலோ என்னவோ? அந்த தருணம், அவன் உணர்ந்த ஒப்பீட்டிற்கு நிகராய் ஒரு குறள் அவனுக்கு நினைவு வந்தது. “இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து” என்று அவள் கேட்கும்படி அக்குறளை அவன் உச்சரிக்க, அவனை மகிழ்வும், குழப்பமும் கலந்த பார்வையோடு ஏறிட்டாள். “அவளுடைய கருணைமிகுந்த கண்களுக்கு இரண்டு பாத்திரமுண்டு. ஒன்று கொல்வது, இன்னொன்று குணப்படுத்துவது”...

திருப்பம்-48

Image
 திருப்பம்-48 “ஏ தீபி க்கா. வா வா” என்று விக்ரமன் கூற, “வாரம்லே” என்றபடி வந்தாள். “மாமா” என்று அவனை ஓடிச்சென்று மகிழ் கட்டிக்கொள்ள, “அம்மாடி. வாலே ராசா” என்று தன்மீது வந்து பொத்தென்று விழுந்தவனைத் தாங்கிக் கொண்டான். “அத்தே” என்றபடி உள்ளே ஓடிய தேவிகா கண்ணில் பட்ட இரண்டு அத்தைகளையும் கட்டிக் கொண்டு, “இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?’ என்று கேட்க, “வாடி ராஜாத்தி” என்று அவளை அள்ளி முத்தமிட்ட கார்த்திகா, “ஒங்க பாட்டிதேம் செய்றாவ. போயி கேளு” என்று கூறினாள். “பாட்டீ” என்று உள்ளே ஓடியவளை வைத்து சீராட்டிய தெய்வநாயகி, உணவு பட்டியலையும் கூறி அனுப்பினார். தனம் அறையின் உள்ளே ஒளிசுடர் அழும் குரல் கேட்க, “ஆத்தா சிங்காரி ஆரமிச்சுட்டாளே” என்று கார்த்திகா அழுப்பாய் கூறினாள். “இருங்க நாந்தூக்கிட்டு வரேன்” என்று சங்கமித்ரா கூற, “ஒனக்கு கொடுத்த வேலைய மொத செய்யு. வந்து நாஞ்செய்யுறேம் நாஞ்செய்யுறேமுனு ஒக்காந்துட்டு ஒன்னுத்த நவட்டக்காணும். அங்கன அத்தனப்பேரு இருக்காவ புள்ளைய பாத்துகிட. இங்க தூக்கிட்டு வருவ, அவ என்னத்தையாது அள்ளி மேல கீழ கொட்டிகிட்டானா நீயா பாப்ப? அவதேம் அல்லல் படோனும்” என்று தெய்வநாயகி அதட்டினார். ...

திருப்பம்-47

Image
 திருப்பம்-47 காலை வேளை, தன்னுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனையாளின் முகம் பார்த்தபடியே படுத்திருந்தான், திருமாவளவன். அவிநாஷின் நலவிசாரிப்புகளையும், அதற்கு அவள் கூறிய பதிலையும் கேட்டுத் தெரிந்துகொண்டவனுக்கு மனதில் சொல்லொண்ணா உணர்வு. மெல்ல எழுந்து மேஜைக்கு வந்தவன், காகிதத்தையும் பேனாவையும் எடுத்தான். 'அன்புள்ள மித்துக்கு, அடியே சீனி பட்டாசு. மனசுக்குள்ள ஏன்டி கண்ட நேரத்துல வெடிக்குறவ? உன்னால ஆர அமர எழுந்துட்டுருந்தவேன் அதிகாலக்கு எழுந்து தவிக்கேம். நீயே என்னைய நெறயா லவ்வு பண்ணினா, நானு லவ் பண்ண பொறவு என்னருக்கும் சொல்லு? என்னையவுட நீயு நெறையா காதலிக்க புள்ள. போவப்போவ ஓன் காதலு முன்னுக்க ஏங் காதலு குட்டியாப்போவும் போல. மலையும் பள்ளமுமாதேம் தெரியபோவுது போ. அம்புட்டுக்கு பொறவும் எப்புட்ரி அண்ணேன்ட ஓன் நிம்மதிக்குக் கொறவில்லங்குற? மிந்தாநேத்து நீயு பயத்துல நடுங்கினதுலாம் கண்ணுக்குள்ளாரயே நிக்கிடி.’ என்றெழுதி நெஞ்சை நீவிக் கொண்டு தொடர்ந்தான். 'மித்ரா, வீட்டுல இப்புடியே இருக்காதட்டி. அம்மா ஏதும் ஆகாத ஒடக்கிழுத்தா பதிலு பேசிபுடு புள்ள. என்ன நானே இப்புடி சொல்லுறேமுனு நெனக்காதட்டி. ந...

திருப்பம்-46

Image
 திருப்பம்-46 “அவேம் என்னயபோல இல்ல கார்த்தி. நானுகூட சண்டகிண்டலாம் அப்பைக்கு அப்பை போட்டுபுடுவேம். அவேம் ரொம்ப பாசமாருப்பாம். ரொம்ப அட்டாச்டா இருப்பாம் குடுமத்தோட. அப்படியொரு நெலயில குடுமத்துக்கும், அந்த புள்ளைக்கு நடுவுல அவேம் அல்லாடனுமில்ல? அவேம் இல்லாம நம்மாலதேம் இருந்துகிட முடியுமா சொல்லு?” என்ற விக்ரமன் கண்கள் சிவந்து போக, “ஏங்க” என்று அவன் கன்னத்தில் கை வைத்தாள்.  அவள் கரத்தின் மேல் தன் கரம் வைத்தவன், “தெனத்துக்கும் அற கதவ தொறந்துகிட்டு வாரயிலயே அவேம் கொரலு கேட்டுபுடும்ல கார்த்தி. அவேம் இந்தூட்டுல இல்லாம போனா.. எ..எப்புடி?” என்று தடுமாற, “ஷ்ஷ்” என்று அவன் இதழில் விரல் வைத்தாள். விக்ரமன் அவளை பரிதாபமாய் நோக்க,  அவனைப் பரிவாய் பார்த்தவள், “ஏன் நடக்காததயெல்லாம் நெனச்சுகிட்டு வெசனப்படுதீய?” என்று கூறினாள். விக்ரம் ஏதோ பேச வர, “ஷ்ஷ்” என்று மீண்டும் அதட்டலாய் கூறி அவனைத் தடுத்தவள், “அப்புடியொன்னு நடந்தா தடுப்பமுனு சொல்ல வாயி வரல. அத்தே செய்யுற அலுசாட்டியமப்புடி. ஆனா அந்த அளவுக்கு முத்தாதுனு நம்புவமே. ரெண்டு மூனு மாசம் போயோ, இல்ல அந்த புள்ள உண்டாயியோ போனா எல்லாந் தனிஞ்சுபு...