Posts

Showing posts from June, 2025

திருப்பம்-94

Image
  திருப்பம்-94 'அன்புள்ள திருமாலுக்கு, இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மிஸ்டர் திருமால் மித்ரா. யோசித்துப் பார்க்கும்போது ஒருமாதிரி புல்லரிக்குது. ஒரு வருஷம் ஆயிடுச்சு நாம கல்யாணம் பண்ணி! இந்த ஒரு வருஷத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள், உணர்வுகள், ஆசைகள், ஏக்கங்கள், சண்டைகள், எல்லாத்தையும் தூக்கி சாப்பிடும் விதமான காதல் மழைகள்! ஒருமாதிரி நல்லாருக்கு. காதல் கசக்குதைய்யானு இருந்த என்னைக் காதலிச்சு, காதலிக்க வச்சு, காதல்மேல ஒரு தூய்மையான அபிப்ராயத்தை உருவாக்கி, என் காதலுக்கான இலக்கணமாவே ஆயிட்டீங்க. நம்மளோட இந்த அழகான காதலும், அதுக்கு உரிமம் கொடுத்த உறவும் நிலைச்சு நிற்கனும்னு மனசார வேண்டிக்குறேன். மீண்டும் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்ங்க. உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்குது. இன்னும் இன்னும் பிடிக்கனும்’ என்று எழுதி இதய வடிவங்கள் பல வரைந்து, அழகான இதய வடிவ உறைக்குள் அதை வைத்தாள். பால்கனிக்குச் சென்று, அவன் பராமரித்துப் பாதுகாத்திருந்த சங்குப்பூச் செடியிலிருந்து பூக்கள் இரண்டு பறித்தவள், அதனை உறைக்குள் வைத்துவிட்டு அதனை மேஜையின் இழுப்பறையினுள் பதுக்கி வைத்தாள். இழுப்பறைக்குள் முந்தைய நாள் அவள் ...

திருப்பம்-93

Image
  திருப்பம்-93 அழகிய மாலை வேளை, அவ்வீட்டில் மிகுந்த சந்தோஷம் நிறைந்திருக்க, வேந்தன், முகிழினி, யாழ் மித்ரன், அவன் மடியில், பிறந்து இரண்டு மாதமான ஒரு பெண் குழந்தையும், அக்குழந்தையின் இரட்டை சகோதரன் ரசிகப்ரியாவின் மடியிலும் உறங்கிக் கொண்டிருந்தனர். ஆரோஹனும் செந்தூரனின் மகனான அமரனும் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருக்க, செந்தூரன் தனது மனைவி மீனாட்சி, மடியில் அவர்களது ஒன்றரை மாத ஆண் குழந்தை கார்த்திகேயனுடன் அமர்ந்திருந்தான். அவர்களுடன் வளவன், சங்கமித்ரா, வடிவேல் மற்றும் மூன்று மாத கற்பவதி தனலட்சுமியும் இருந்தனர். “இவரு இருக்காரே.. இவருக்கு பையன் பிறந்துடனும் மேடமுக்கு பொண்ணு பிறந்துடனும்னு ஒரு நாளைக்கு மூனு முறையாது சொல்லிடுவாங்க. ஃபோட்டோ எடுத்து நெக்ஸ்ட் ஜெனரேஷன்னு போட்டு ஃப்ரேம் பண்ணி வீட்ல மாட்டனும் மீனா மாட்டனும் மீனானு தினம் தினம் அதே பேச்சுதான். கஷ்டப்பட்டு பிள்ளை பெத்துக்கிட்டவ நானு. இவளுக்கு என்னாச்சோனுலாம் இல்லை. பையன் பிறந்துட்டானானு தான் கேட்குறாரு” என் மீனாட்சி கோபமாய் கூற, “ஆமா என்னமோ அதுக்கு என்னை மன்னிச்சு விட்டுட்டப்போலதான்டி பேசுற. டெலிவரி வார்ட்ல படுத்துகிடக்குறோம்...

திருப்பம்-92

Image
  திருப்பம்-92 நாட்கள் சில ஓடி, மாதங்களுக்கு வழிவகை செய்திருந்தது. மூன்று மாதங்கள் ஓடியிருந்த நிலையில் அன்று மருத்துவமனையில் மருத்துவர் முன் அமர்ந்திருந்தனர் சங்கமித்ரா மற்றும் வளவன். அவளது அறிக்கைகளைப் பார்வையிட்ட மருத்துவர், “சங்கமித்ரா.. இப்ப எப்படி ஃபீல் பண்றீங்க? நடக்கும்போது பேலென்ஸ் இல்லாத போலவோ, வலிக்குற போலவோ இருக்கா?” என்று அவர் கேட்க, இல்லையென்று தலையசைத்தவள், ‘வலி இல்லை. ஆனா வேகமா நடக்கவரலை' என்று அவள் சைகை செய்தாள். “ம்ம்.‌.. உங்களுக்கு ஏற்பட்டிருந்தது மைனர் பிராக்சர்தான். மூன்றுலருந்து நான்கு மாதங்கள்லயே அது கம்ப்ளீட்டா குணமாயிடும். இருந்தும் டிஸ்கம்ஃபோர்ட்ஸ் இருக்கத்தான் செய்யும். இப்ப கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மேல ஆயிடுச்சு. அதனால பிராக்சர் கம்ப்ளீட்டாவே குணமாயிடுச்சு. இருந்தாலும் சில டிஸ்கம்ஃபோர்ட்ஸ் இருக்கத்தான் செய்யும். சட்டுனு எழுந்துக்கும்போதோ இல்ல வேகமா நடக்க முயற்சி செய்யும் போதோ இப்படி ஃபீல் இருக்கும். இது நார்மல் தான். இதுக்கும் சேர்த்து ஒரு ரெண்டு மாசம் மெடிகேஷன்ஸ் ஃபாலோ பண்ணுங்க. எல்லாம் சரியாயிடும்” என்று மருத்துவர் கூற, 'படி ஏறலாமா?’ என்று சைகை செய்...

திருப்பம்-91

Image
  திருப்பம்-91 அந்த காவல் நிலையத்தில் இருபக்க ஆட்களும் கூடியிருந்தனர். வளவன், வடிவேல், மகா, விக்ரமன், சிவபாதசேகரன், மற்றும் சுயம்புலிங்கம் ஒரு பக்கம் நிற்க, தங்கப்பாண்டி, அவனது அடியாட்கள் ஒரு பக்கம் நின்றிருந்தனர். “லேய் யாருமேல பொய் கேசு தார? இஞ்சாரு.. ஓம் பொண்டாட்டிய அடிச்ச வண்டிய நா எப்பதயோ வித்துபுட்டேம். ஓம்மாட்டுக்கு ஊசி போட்டது, சரக்கு லாரிய அடிச்சதுனு நீயு சொல்ற எதுமே நாம்பண்ணதில்ல” என்று தங்கப்பாண்டி உச்சக்கட்ட கோபத்தில் கூற, “ஆமா ஆமா.. அதெல்லாம் தோரசார் பண்ணல. ஆளுவிட்டு பண்ணாவ” என்று வடிவேல் நக்கலாய் கூறினான். “ஏய்..” என்று தங்கப்பாண்டி கத்த, “லேய்.. சவட்டிப்புடுவேம். அனக்கத்தக்கூட்டாத. அம்புட்டும் நீதேம் பண்ணனு எங்கட்ட ஆதாரமெல்லாம் இருக்குது” என்று மகா கூறினான். “ஆளுவ அம்புட்டுப்பேரயும் கூட்டிகிட்டு வந்துட்டா நீங்களெல்லாம் பெரிய மனுஷவியளோ? இல்லாத குத்தத்தச் சொல்லி என்னைய ஓய்க்கப் பாக்குறீயளாக்கும்?” என்று அவன் கத்த, தன் பக்கமிருந்த பேசவிருந்தோரைத் தடுத்த வளவன், மித்ரனை நோக்கினான். சிறு தலையசைப்புடன் ஒரு கோப்பை எடுத்த மித்ரன், “இது உன் ஃபோன் கால் ஹிஸ்ட்ரி. இது உன் பேங்க் ...

திருப்பம்-90

Image
  திருப்பம்-90 வளவனும் வடிவேலும் பதட்டத்துடன் தங்கள் வண்டியில் அமர்ந்தபடி செந்தூரனுக்கு அழைப்பு விடுத்துக் காத்திருக்க, அழைப்பை ஏற்ற செந்தூரன், “ஹலோ யாரு?” என்று கம்பீரமாய் கேட்டான். “ஹலோ சார். நாங்க மித்ரா அண்ணே கூட்டுக்காரவோ” என்று வளவன் கூற, “ஆங் நீங்க தானா? சார் இப்பத்தான் சொன்னாங்க. நான் பக்கத்துல வந்துட்டேன். லோகேஷன் அனுப்புறேன் வாங்க” என்று சிரிப்போடு கூறினான். ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்ட நண்பர்கள் சரியென்று அழைப்பைத் துண்டிக்க, செந்தூரன் வரவேண்டிய இடத்தினை அனுப்பி வைத்தான். “ஏம்லே.. இது காட்டுக்குள்ளார இருக்க அவேனோட வீடுதானம்லே?” என்று வடிவேல் கேட்க, “அதேதேம்..” என்ற வளவன் வண்டியைத் திருகினான். சில நிமிடங்களில் காட்டை அடைந்த இருவரும் செந்தூரனுக்கு அழைப்பு விடுத்தனர். “ஐய்யய்யே.. இவனுங்க ரொம்ப பதறுறானுங்களே” என்று எண்ணிய செந்தூரன், “வந்துட்டேன் வந்துட்டேன்பா. பக்கத்துல வந்துட்டேன்” என்று கூற, “நாங்க காட்டுக்கு வந்துட்டோம் சார். உள்ள போவல. நீங்க வாரீயலானு கேக்கத்தேம் கூப்டேம்” என்று வடிவேல் கூற, “நீங்க தனியா போக வேணாம். நான் வரேன்” என்று கூறினான். சில நிமிடங்களில்...