21.சாராவின் ஜீபூம்பா

அத்தியாயம்-21 'யாரோ..யாரோடி! உன்னோட புருஷன்.. யாரோ? யாரோடி! உன் திமிருக்கு அரசன்..’ என்று ஒலிபெருக்கியில் ஒலித்த பாடல் அந்த மண்டபம் எங்கும் எதிரொலிக்க, பட்டு வேட்டி சட்டையில், முறுக்கிய மீசையும் தாடியல்லாது மலித்து எடுத்ததன் விளைவாய் தெரிந்த அவனது ஒட்டிய திராவிட நிற கன்னங்களும், கூர்மையான கண்களும் என கம்பீரமும் கலைஞனுமாய் அமர்ந்திருந்தான், இலக்கியன். “லக்கி என்னைப் பாரு” என அவன் முகம் பிடித்து திருப்பிய சாரா, அவனுக்குத் தன் கைகுட்டையால் துடைத்துவிட்டு “இப்ப ஓகே. நீ வெயிட் பண்ணு நான் ஆரூ ரெடியானு பார்த்துட்டு வரேன்” என பெரிய மனுஷிபோல் கூறிவிட்டு செல்ல, செல்பவளை புன்னகையுடன் பார்த்தவன் மனமெல்லாம் தித்திப்பாய் இனித்தது. ஆம் தற்போது அவள் அவனின் மகளாய் சட்டப்படி தத்தெடுக்கப்பட்டுவிட்டாளே! தங்கள் திருமணத்தில் தங்களின் மகளாய் சட்டபடி முடிவான திருப்தியோடு முழு சொந்தமாக சாரா வளைய வரவேண்டும் என்று இலக்கியன் விரும்பியிருந்தான். அவன் எண்ணங்களும் அவள் எண்ணங்களும் சாரா விடயத்தில் என்று மாறியிருந்தது? அன்றைய இரவே அவனது அலைபேசி ஒலித்தது கார்த்திக்கின் அழைப்பைத் தாங்கியபடி. “சொல்லுங்க...