Posts

Showing posts from July, 2025

1.அந்தமற்ற ஆதரமே

Image
  அத்தியாயம்-01 சுற்றிலும் யுத்தம் நடந்ததற்கான அடையாளமாய், குறுதிகறை படிந்து, ஆங்காங்கே பூமி பிளந்து, மழை பொழிய மனமற்றபோதும் வானம் கருத்து காட்சியளித்தது. எங்கும் சோக ஓலங்களின் ஒலிகள் மட்டுமே பிரதிபலிக்க, அனைத்தையும் கண்களில் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர், அவ்விருவர். வழிமாறிப் போன தன் செயலில் இப்பேற்பட்ட பலி நடந்துவிட்டதை சற்றும் ஜீரணிக்க இயலவில்லை அந்த ஒருவரால்! தான் இத்தனை பெரிய பேரழிவுக்கு காரணியாகுமளவு வசியப்படுத்தப்பட்டதை சற்றும் ஏற்க மனமின்றி கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தார்.  அவர் தோளில் கைபோட்ட மற்றயவர், "நீ அழறது ஒரு அண்ணனா பார்க்கக் கஷ்டமா இருந்தாலும் உனக்கு ஆறுதல் சொல்லத் துளியும் எனக்கு மனசில்லை. சொல்ல வருத்தமா இருந்தாலும் இந்த பேரழிவுக்கு நீ ஒருத்தன் தான் காரணம்" என்று ஜோயல் கூற,  கண்ணீரோட மண்டியிட்டு அமர்ந்து அவர் கால்களைப் பற்றிக்கொண்டு கதறினார் காஸ்மோ. அந்த மொத்த கூட்டமும் கதறியழும் காஸ்மோவை கண்களில் கணல் வெறியோட பார்க்க,  அவரால் மன்னிப்பைக் கூட கேட்க இயலவில்லை.  தன்னால் நடந்த இழப்பினை மன்னிப்பால் ஈடுகட்ட இயலாது என்று தெரிந்தும் அதை கேட்...

திருப்பம்-115 (எபிலாக்)

Image
  திருப்பம்-115 (எபிலாக்) “மலரு… ஒரு இடத்துல நிப்பியா மாட்டியா நீ?” என்று கத்திய சங்கமித்ரா, மகள் சொல்பேச்சுக் கேட்காத கோபத்தில் லேசாய் அடித்துவிட, ஓவென்று தன் அழுகையைத் துவங்கினாள் அந்த மூன்று வயது சுட்டி வாண்டு. மகளின் அழுகுரலில் பதறிக் கொண்டு குளியலறையிலிருந்து, ஈரம் சொட்ட வந்த வளவன், “என்னாச்சு மித்ரா?” என்க, கோபத்துடன், “தண்ணிய கொட்டாத கொட்டாதங்குறேன் உங்க மக ஒரு இடத்துல நிக்காம தண்ணிய கொட்டிட்டே இருக்கா ரூம் பூரா. அதான் ஒன்னு போட்டேன். லேசா கை பட்டதுக்கே ஆவூனு ஊரைக் கூட்டுரா” என்றவள், “சுப்.. அழறத நிறுத்து” என்று கண்டித்தாள். “அப்பா..” என்று அழுதபடி குழந்தை தந்தையிடம் போக, “அழகுராணி..” என்றபடி மகளை அள்ளிக் கொண்டவன், “அம்மா சொல்றத கேக்கனுமில்ல தங்கம்” என்று கொஞ்சுதலாய் கூறினான். குழந்தை அடிகுரலில் அழுதபடியே தந்தையைக் கழுத்தோடு கட்டிக்கொண்டு அன்னை சமாதானம் செய்வாளா? என ஓர விழியாள் பார்க்க, “திகழ்தான் சமத்து. சமத்தா குளிச்சு ட்ரஸ் பண்ணிட்டு கீழ விளையாட போயாச்சு. நீ இன்னும் குளிக்கவும் வர மாட்ற, ரூமெல்லாம் மொழுகிட்டு இருக்க. இதுல உன்னை நான் சமாதானம் வேற செய்யனுமா?” என்று கண்டிப்ப...

திருப்பம்-114

Image
  திருப்பம்-114 நாட்கள் இரண்டு ரம்மியமாய் கடக்க, அன்றைய காலை, அந்த பரபரப்பற்ற கோவிலில், தங்கள் குடும்பத்தாருடன் வந்தனர் அனைவரும். அது சின்னக் கோவில் தான் என்பதால், மிக நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு யாருக்கும் அழைப்பு விடுத்திருக்கவில்லை. அதனால் பெரிதும் கூட்டமின்றி, உள்ளே வந்தவர்கள், பெயர் சூட்டுவதற்கான ஆயத்தங்களைத் துவங்கினர். கோவில் பிரகாரத்தில் கார்த்திகாவும், சங்கமித்ராவும், தத்தமது மடியில், தங்கள் வாரிசுகளுடன் அமர்ந்திருந்தனர். “அக்கா.. உங்களுக்கு உடம்பு ஓகேவா க்கா?” என்று சங்கமித்ரா கொஞ்சம் திக்கலோடு கேட்க, “ஏட்டி சங்கு.. திக்கலுலாம் நல்லா கொறஞ்சுடுச்சே..” என்று உற்சாகமாய் கூறியவள், “எனக்கெல்லாம் ஒன்னுமில்லத்தா. புள்ள கொஞ்சம் முன்னுக்கவே வந்துட்டாரேனுதேம் அவேனுக்காவ ஆஸ்பத்ரில கெடந்தது” என்று கூறினாள். “அம்மா.. ஷ்ஷ்.. டூ தம்பு தூங்கி” என்று அன்னையின் சத்தத்திற்கு குழந்தைகள் லேசாய் அசைவதைக் கண்ட சுடர் கூற, பெண்மணிகள் இருவரும் சிரித்துக் கொண்டனர். அவர்களுடன் தனது மகனைத் தோளில் போட்டுத் தட்டிக் கொண்டே வந்தமர்ந்த தனம், “ஏத்தா சுடரு.. ஒனக்கு பாரேம் ரெண்டு தம்பி” என்று கூற, “த்ரீ...

திருப்பம்-113

Image
  திருப்பம்-113 அலைபேசியில் புன்னகை முகமாய் பேசியபடி, கூடத்திற்கு வந்த வளவன், “சாப்பாடுலயெல்லாம் ஒரு கொறயும் இருக்கக்கூடாது அண்ணே. எம்புட்டானாலுஞ் சரி. நல்லபடிக்கா பண்ணித்தந்துருங்க” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். “யாருயா?” என்று தெய்வா மகனிடம் கேட்க, “ஆசரமத்துக்கு சாப்பாடு அனுப்பனுமுனு சொல்லிருந்தேமுல்லம்மா? அந்த காண்டிராக்டு அண்ணேன்டதேம் பேசினேம்” என்று கூறினான். “நேரமா போயி சேத்துபுட சொல்லுய்யா” என்று சுயம்புலிங்கம் கூற, “சொல்லிருக்கேம் ஐயா” என்று கூறினான். “அப்பறோஓஓம்…” என நீட்டி முழக்கிய தெய்வா, “பேருலாம் ரோசிச்சாச்சா?” என்று கேட்க, “இதுக்குத்தேம் இம்புட்டு நீட்டி மொழக்குனியாக்கும்?” என்று லிங்கம் கேட்டார். லேசாய் புன்னகைத்த வளவன், “ரோசிச்சாச்சு அம்மா” என்க, “என்ன பேராம்?” என்றார். “நவநீதன் ம்மா” என்று அவன் கூற, “நவனீதனா? ஏம்லே.. நம்ம கொலசாமி முருகேனே பொறந்துருக்கியாமுனு பாத்தேம்.. முருகேம் பேரு வச்சா ஆவாதா?” என்று கேட்டார். அவர் கேட்டதும் வளவன் கோபம் கொள்வானோ என்று லிங்கம் நினைக்க, அவனோ அடக்கமாட்டாது வெடித்து சிரித்தான். மகன் சிரிப்பதை பெற்றோர் இருவரும் வித்தியாசமாய...

திருப்பம்-112

Image
  திருப்பம்-112 குழந்தையை வெளியே காத்திருப்பவர்களுக்குக் காட்ட வேண்டி அவன் கொண்டுவர, அவனுக்குத் துணையாய் செவிலியரும் வந்தார். தன் மகனுடன் வெளியே வந்து நின்றவன், “சிங்கக்குட்டி பொறந்துருக்கியாம்லே” என்க, ஆண்கள் அனைவரும் “ஏ..” என்று கோஷம் போட்டனர். அதில் குழந்தை சினுங்க, “லேய்.. கத்தாதீயடா” என்று பதட்டமாய் கூறினான். “பொறுப்பாயிட்டாவளாம்” என்று மகா கூற, “ஆவனும்மில்ல அத்தான்” என்று பரிதவிப்பாய் கூறினான். சுயம்புலிங்கம் மற்றும் தெய்வநாயகி, மருத்துவமனைக்கு விரைந்தோடி வந்திருந்தனர். “எம்மவராசா” என்று தெய்வா மனமார குழந்தையைக் கொஞ்ச, “புள்ள எப்புடியிருக்காலே?” என்று லிங்கம் பதட்டமாய் கேட்டார். “நல்லாருக்காப்பா” என்றவன், தன் மகனைப் பார்த்து, “ஆனா தொற எந்தங்கத்த அழுவவுட்டுப்புட்டாருல்ல?” என்று கூற, “அழுவாம புள்ள பெற முடியுமா?” என்று புன்னகையாய் தெய்வா கூறினார். அனைவரையும் நிமிர்ந்து பார்த்தவன், கண்களில் கண்ணீருடன் முகம் சிவந்து, நுனிமூக்கு நடுங்க உணர்ச்சிப் பிரவாகத்துடன் நிற்கும் அவிநாஷைக் கண்டான். சச்சிதானந்தத்திடம் இருக்கும் உணர்வுக்குவியளைவிடவும் அவன் முகத்தில் அதிகமாகவே இருந்தது… தான் மகள...