Posts

Showing posts from July, 2025

21.சாராவின் ஜீபூம்பா

Image
  அத்தியாயம்-21 'யாரோ..யாரோடி! உன்னோட புருஷன்.. யாரோ? யாரோடி! உன் திமிருக்கு அரசன்..’ என்று ஒலிபெருக்கியில் ஒலித்த பாடல் அந்த மண்டபம் எங்கும் எதிரொலிக்க, பட்டு வேட்டி சட்டையில், முறுக்கிய மீசையும் தாடியல்லாது மலித்து எடுத்ததன் விளைவாய் தெரிந்த அவனது ஒட்டிய திராவிட நிற கன்னங்களும், கூர்மையான கண்களும் என கம்பீரமும் கலைஞனுமாய் அமர்ந்திருந்தான், இலக்கியன்.  “லக்கி என்னைப் பாரு” என அவன் முகம் பிடித்து திருப்பிய சாரா, அவனுக்குத் தன் கைகுட்டையால் துடைத்துவிட்டு “இப்ப ஓகே. நீ வெயிட் பண்ணு நான் ஆரூ ரெடியானு பார்த்துட்டு வரேன்” என பெரிய மனுஷிபோல் கூறிவிட்டு செல்ல, செல்பவளை புன்னகையுடன் பார்த்தவன் மனமெல்லாம் தித்திப்பாய் இனித்தது. ஆம் தற்போது அவள் அவனின் மகளாய் சட்டப்படி தத்தெடுக்கப்பட்டுவிட்டாளே! தங்கள் திருமணத்தில் தங்களின் மகளாய் சட்டபடி முடிவான திருப்தியோடு முழு சொந்தமாக சாரா வளைய வரவேண்டும் என்று இலக்கியன் விரும்பியிருந்தான்.  அவன் எண்ணங்களும் அவள் எண்ணங்களும் சாரா விடயத்தில் என்று மாறியிருந்தது? அன்றைய இரவே அவனது அலைபேசி ஒலித்தது கார்த்திக்கின் அழைப்பைத் தாங்கியபடி. “சொல்லுங்க...

20.சாராவின் ஜீபூம்பா

Image
  அத்தியாயம்-20 வழக்கு ஓய்ந்த மறுநாள் “சார் எப்படி சார் சர்வேஷ் தான் கொலையாளினு கண்டுபிடிச்சீங்க?” என்று செந்தில் வினவ,  “என்னை வேவு பார்த்தான் செந்தில். நான் போகுமிடமெல்லாம் மகிந்தனை சர்வேஷோட மீட் பண்ணேன். தற்செயலா இருப்பது போல தான் இருந்தது. ஆனா மூனு தடவைக்கு மேல பார்க்கவும் மகிந்தன் மேல தான் சந்தேகம் வந்தது. அடுத்த முறை மீட் பண்ணும்போது பேச்சு வாக்கில் சர்வேஷ் போட்ட ஷெடியூல்படிதான் அவர் வர்றதா சொல்லவும் சர்வேஷ் மேல சந்தேகம் வந்தது.  சந்தேகத்தை உடனே தீர்க்கத்தான் உங்களுக்கு உடனே கால் பண்ணி ஹெல்மெட் போட்டுகிட்டு வேகமா அவங்கள மோதுற போல வர சொன்னது. நான் ப்ளான் போட்ட மாதிரி சர்வேஷ் கீழ விழ, அவர பிடிக்கும் போது ஹார் ஃபாலிகில எடுத்துட்டேன். தடுக்கிவிட்டு நானே பிடிச்சு சிம்பிலா கூட இதை செய்திருக்கலாம். ஆனா எந்த இடத்திலும் அவன் மேல எனக்கு சந்தேகம் வந்தது தெரிஞ்சுடக்கூடாதுனு ஒரு எண்ணம். என்னோட சந்தேகப் பார்வையக்கூட நான் மகிந்தன் மேல படுற போலதான் வச்சிருந்தேன். அது அவனோட மெத்தனத்தைக் கூட்ட இன்னும் வசதியா போச்சு” என்று பெருமூச்சுவிட்டான். “செம்ம சார் நீங்க” என்ற செந்திலின் பாராட்ட...

19.சாராவின் ஜீபூம்பா

Image
  அத்தியாயம்-19 கண்களில் அத்தனை கோபத்தோடு தன் முன் கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருக்கும் சர்வேஷைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் இலக்கியன். அவனுடன் செந்தில், தினேஷ் மற்றும் சுதிர் நின்றுகொண்டிருக்க, அவர்களின் அறையின் கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கம் கமிஷ்னர் மற்றும் அந்த வழக்கினைப் பார்த்துக் கொண்டிருந்த ராம் இருந்தனர். ராமின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்காதது தான் குறை. தன்னுடைய வழக்கை அவன் கைப்பற்றி தற்போது நற்பெயர் எடுத்துக் கொண்டிருக்கின்றானே என்ற கோபமும், முதலிலேயே அவன் பேச்சினைக் கேட்டு ஆதாரங்களை வாங்கி, தானே கண்டுபிடித்தது போல் காட்டியிருக்கலாமே என்று தன்னுடைய முட்டாள்தனமான கோபத்தின் மீதும் கோபம் கொண்டிருந்தான். “சொல்லு” என்று ஒரு வார்த்தை தான் இலக்கியன் உதிர்த்தான். ஆனால் அதில் கட்டுக்குள் கொண்டுவரத் துடித்த கோபத்தையும் வெறியையும் சர்வேஷால் உணர முடிந்தது.  லேசாய் இலக்கியனை நிமிர்ந்து பார்த்தவன், “பசி..” என்க,  இலக்கியனின் புருவங்கள் குழப்பமாய் முடிச்சிட்டு நின்றன. அதைக் கண்டு சத்தமாய் சிரித்த சர்வேஷ் “என்ன எஸ்.ஐ சார்? புரியலை போலயே?” என்க,  கண...

18.சாராவின் ஜீபூம்பா

Image
  அத்தியாயம்-18 “ஏ சாரா பேபி” என்று ஜீபூம்பா அழைக்க, இல்லத்தில் தனது ஆஸ்தான இடமான மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் ஜீபூம்பாவின் அழைப்புக்கு ‘உம்’ கொட்டினாள். “உனக்கு இந்த இல்லம் எவ்வளவு பிடிக்கும்?” என்று ஜீபூம்பா வினவ,  “இது என்ன கேள்வி ஜீபூம்பா? இது தானே என்னோட வீடு. அப்ப எனக்கிது பிடிக்காம போகுமா?” என்று கேட்டாள்.  “இது பிடிக்குமா? லக்கி வீடு பிடிக்குமா?” என்று ஜீபூம்பா வினவ, மீண்டும் அதை முறைத்த சாரா,  “என்ன ஜீபூ நீ லூசு மாதிரி கேக்குற? லக்கி வீடு தான் பிடிக்கும்” என்றாள். “ஏன்? பிறந்ததுல இருந்து நீ இங்க தானே இருக்க?” என்று ஜீபூம்பா வினவ,  “ஆமா அதுக்காக இது தான் பிடிச்சு இருக்கனுமா? ல..லக்கி வீடு எனக்கும் வீடு. ஆனா.. இங்க..இங்க..” என்ற குழந்தைக்கு விளக்கம் கொடுக்கத் தெரியவில்லை. தனக்கு ஒரு வாழ்வாதாரம் சொந்தம் என அனைத்தும் கொடுத்தது இந்த இல்லம் தான். அந்த வகையில் இந்த இல்லம் அவளுக்கு மிகவும் பிடித்தமானது என்பது திண்ணம். ஆனால் மனதுக்கு மிகவும் நெறுக்கமானதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. அதற்கு காரணம் கூறிட அந்த வயதில் அவளுக்க...

17.சாராவின் ஜீபூம்பா

Image
அத்தியாயம்-17 முன்பு சந்தித்த அதே கெபிடேரியாவில் அவளுக்காகக் காத்திருந்த இலக்கியனின் மனதில் வலம் வந்து கொண்டிருந்ததென்னவோ, முந்தைய இரவு பார்த்த பரிசோதனையின் முடிவு தான். ‘இத்தனை நாள் கார்த்திக் கார்த்திக் என அவன் பின்னோடேயே சென்றோமே? ஆனால் அந்த கை அணிகலனில் உள்ள மரபணுவும் கார்த்திக்கின் மரபணுவும் ஒத்துப் போகவில்லை என்றல்லவா வருகின்றது? எனில் யார் இதை செய்தது? அந்த குழந்தையின் இறப்புக்கு யார் காரணம்?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க,  ‘இப்ப இது ரொம்ப முக்கியமா? லவ் பண்றதுக்கு பொண்ணை கூப்பிட்டுட்டுப் பொணத்தைப் பத்தி யோசிக்குறானே? ஸப்பா.. இவனுங்கள சேர்த்து வைக்குறதுக்குள்ள' என்று அவன் அருகே அமர்ந்திருந்த ஜீபூம்பா நொந்து கொண்டது. “ஹாய் சார்” என்ற ஆர்ப்பாட்டமான குரலில் மகிந்தன் சர்வேஷுடன் வந்து நிற்க,  தன் நினைவிலிருந்து மீண்ட இலக்கியன் அவனை நிமிர்ந்து பார்த்து “ஹாய் மகிந்தன்” என்றான்.  “நம்ம அடிக்கடி சந்திச்சிக்குறோம்ல?” என்று மகி கூற,  “ஆமா மகிந்தன். என்ன இந்த பக்கம்?” என்று இலக்கியன் கேட்டான். “இந்த ஏரியால சின்ன வேலையா வந்தோம். அப்படியே காஃபி குடிச்சுட்டு போலாமானு சர...

16.சாராவின் ஜீபூம்பா

Image
  அத்தியாயம்-16 “நீ வராம நல்லாவே இல்லை சாரா. எனக்கு ரொம்ப போரிங்கா இருந்தது. சீக்கிரம் வா சரியா? நல்லா சாப்பிடு. மெடிசென்லாம் கரெக்டா போட்டுக்கோ” என்று பெரிய மனித தோரணையில் மதி அறிவுரை கூற, சாராவும் 'டிங் டிங்' என தலையை ஆட்டினாள். அவள் தலைகோதிய ஆரண்ய நிலா, “பாப்பாக்கு ஒன்னுமில்லை” என்க,  “நான் என் லக்கி போல ஸ்ட்ராங் ஆரூ” என்று சாரா குதூகலமாய் கூறினாள்.  “ஆஹாங்.. அப்படியா?” என்று ஆரண்யா வினவ,  “ஆமா ஆரூ. லக்கி எவ்வளவு ஸ்ட்ராங் தெரியுமா? இரு காட்டுறேன்” என மேசையிலிருந்து அவனது அலைப்பேசியை எடுத்துத் திறந்தவள், புகைப்படங்கள் அடங்கிய செயலியிலிருந்து ஒரு காணொளியைக் காட்டினாள். அதில் “லக்கி ஸ்டார்ட்.. வன், டூ, த்ரீ” என்று சாரா கூறுவது கேட்க, புன்னகையுடன் அவன் ஒற்றைக் கையில் தண்டல் எடுத்துக் கொண்டிருந்தான். வியர்வையில் குளித்த வெள்ளைநிற பனியனும், டிராக் பேண்டும் அணிந்துகொண்டு புன்னகையாய் அவன் பயிற்சி செய்ய, அதைக் கண்டு திகைத்துப் போனவளுக்கு, சாராவைப் பார்த்து அவன் கண் சிமிட்டியது காணொளியில் பார்க்க அவளுக்கு செய்ததுபோல் தோன்றியது. அதில் விழிகள் விரிய, அதிர்ந்து போனவள், “ஓ.. ஓக...

திருப்பம்-115 (எபிலாக்)

Image
  திருப்பம்-115 (எபிலாக்) “மலரு… ஒரு இடத்துல நிப்பியா மாட்டியா நீ?” என்று கத்திய சங்கமித்ரா, மகள் சொல்பேச்சுக் கேட்காத கோபத்தில் லேசாய் அடித்துவிட, ஓவென்று தன் அழுகையைத் துவங்கினாள் அந்த மூன்று வயது சுட்டி வாண்டு. மகளின் அழுகுரலில் பதறிக் கொண்டு குளியலறையிலிருந்து, ஈரம் சொட்ட வந்த வளவன், “என்னாச்சு மித்ரா?” என்க, கோபத்துடன், “தண்ணிய கொட்டாத கொட்டாதங்குறேன் உங்க மக ஒரு இடத்துல நிக்காம தண்ணிய கொட்டிட்டே இருக்கா ரூம் பூரா. அதான் ஒன்னு போட்டேன். லேசா கை பட்டதுக்கே ஆவூனு ஊரைக் கூட்டுரா” என்றவள், “சுப்.. அழறத நிறுத்து” என்று கண்டித்தாள். “அப்பா..” என்று அழுதபடி குழந்தை தந்தையிடம் போக, “அழகுராணி..” என்றபடி மகளை அள்ளிக் கொண்டவன், “அம்மா சொல்றத கேக்கனுமில்ல தங்கம்” என்று கொஞ்சுதலாய் கூறினான். குழந்தை அடிகுரலில் அழுதபடியே தந்தையைக் கழுத்தோடு கட்டிக்கொண்டு அன்னை சமாதானம் செய்வாளா? என ஓர விழியாள் பார்க்க, “திகழ்தான் சமத்து. சமத்தா குளிச்சு ட்ரஸ் பண்ணிட்டு கீழ விளையாட போயாச்சு. நீ இன்னும் குளிக்கவும் வர மாட்ற, ரூமெல்லாம் மொழுகிட்டு இருக்க. இதுல உன்னை நான் சமாதானம் வேற செய்யனுமா?” என்று கண்டிப்ப...