திருப்பம்-115 (எபிலாக்)
திருப்பம்-115 (எபிலாக்) “மலரு… ஒரு இடத்துல நிப்பியா மாட்டியா நீ?” என்று கத்திய சங்கமித்ரா, மகள் சொல்பேச்சுக் கேட்காத கோபத்தில் லேசாய் அடித்துவிட, ஓவென்று தன் அழுகையைத் துவங்கினாள் அந்த மூன்று வயது சுட்டி வாண்டு. மகளின் அழுகுரலில் பதறிக் கொண்டு குளியலறையிலிருந்து, ஈரம் சொட்ட வந்த வளவன், “என்னாச்சு மித்ரா?” என்க, கோபத்துடன், “தண்ணிய கொட்டாத கொட்டாதங்குறேன் உங்க மக ஒரு இடத்துல நிக்காம தண்ணிய கொட்டிட்டே இருக்கா ரூம் பூரா. அதான் ஒன்னு போட்டேன். லேசா கை பட்டதுக்கே ஆவூனு ஊரைக் கூட்டுரா” என்றவள், “சுப்.. அழறத நிறுத்து” என்று கண்டித்தாள். “அப்பா..” என்று அழுதபடி குழந்தை தந்தையிடம் போக, “அழகுராணி..” என்றபடி மகளை அள்ளிக் கொண்டவன், “அம்மா சொல்றத கேக்கனுமில்ல தங்கம்” என்று கொஞ்சுதலாய் கூறினான். குழந்தை அடிகுரலில் அழுதபடியே தந்தையைக் கழுத்தோடு கட்டிக்கொண்டு அன்னை சமாதானம் செய்வாளா? என ஓர விழியாள் பார்க்க, “திகழ்தான் சமத்து. சமத்தா குளிச்சு ட்ரஸ் பண்ணிட்டு கீழ விளையாட போயாச்சு. நீ இன்னும் குளிக்கவும் வர மாட்ற, ரூமெல்லாம் மொழுகிட்டு இருக்க. இதுல உன்னை நான் சமாதானம் வேற செய்யனுமா?” என்று கண்டிப்ப...