Posts

Showing posts from April, 2025

திருப்பம்-16

Image
 திருப்பம்-16 “மாமா” என்று அவிநாஷ் அவர் தோள் தொட, மருமகன் கரத்ததை அழுந்தத் தட்டிக் கொடுத்தபடி நிமிர்ந்து அமர்ந்தார். கண்கள் சிவக்க அமைதியும் அழுத்தமுமாய் நின்றிருந்த வளவன் விழிகள், அவள் அறைவிட்டு வெளியே வந்துவிட மாட்டாளா? என்பதிலேயே படிந்திருந்தது. அவன் உள்ளம் அவள் அகம் சென்றடைந்ததோ என்னவோ? தற்செயலாகக் கதவைத் திறந்துக் கொண்டு வந்த பாவையவள், கூடத்தில் நிற்பவனை அதிர்வாகக் கண்டாள். சச்சிதானந்தம் மற்றும் அவிநாஷ் அவளுக்கு புறம் காட்டி நிற்க, அவளவனும் சுயம்புலிங்கமும் அவள் முகம் பார்க்கும்படி இருந்தனர். வெளிப்படையான அதிர்ச்சியோடு நெஞ்சை நீவிக் கொண்டவள் விழிகள் நொடியில் தழும்பியது. சட்டெனத் திரும்பிக் கொண்டாள். ஏறி இறங்கும் நெஞ்சாங்கூட்டை அழுத்தி சமன் செய்தவள், தன் கண்ணீரை அழுத்தமாய் துடைத்துவிட்டுத் திரும்ப, அவளைப் பார்த்த சுயம்புலிங்கம், “மக்ளே வாமா” என்றார். அவள் பெற்றோரும் அத்தானும் அவளைத் திரும்பிப் பார்க்க, சிரம் தாழ்த்தியபடி அவ்விடம் வந்து நின்றாள். இதழ் கடித்து சிரம் தாழ்த்தி அவள் நின்றிருந்த கோலம், சுயம்புலிங்கத்திற்கு அவள் தவிப்பை உணர்த்தியது. முதலில் தன் மகனுக்காக, ‘இவதான்யா என...

திருப்பம்-15

Image
திருப்பம்-15 'எப்படி இருக்கு தெரியுமா? நா.. நான் கேட்டேனா? நீயா கொடுத்த. இப்ப நீயே எடுத்துக்கப் பாக்குற. இது நியாயமா? வலிக்குது. சந்தனம் குடுத்த திரிவக்ரா பாட்டியோட கூன் முதுக மறையவச்ச மாதிரி என் அப்பாவோட கோபத்தையும் மறைய வைக்க மாட்டியா?’ என்று உள்ளே குழந்தையாய் எழுந்தருளியிருக்கும் கண்ணனிடம் குழந்தைப் போல் சண்டையிட்டாள். 'எடுத்துப்பியா என்கிட்டருந்து அவர? நான் தரமாட்டேன். எ..என்னை.. அவர் என்னை எப்படி புரிஞ்சுக்குறார்னு பார்த்தத் தானே? அப்பா ஆயிரம் பேரை நிறுத்தலாம். ஆனா என் ஆசை புரிஞ்சு, என் பயம் அறிஞ்சு, எனக்காக அவங்க லெட்டர் அனுப்பிடுவாங்களா? அனுப்பினாலும்தான் இவரைப்போல என்னை வெறும் காகித வார்த்தைகளால் உணர்ந்துட முடியுமா?’ என்று மனதோடு இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தவளுக்கு மெல்லிய விசும்பல் எழுந்தது. இதழ் கடித்து அடக்கினாள். 'ப்ளீஸ். எனக்கு இந்த சோகத்தைக் கொடுத்துடாத. என்னால இதை தாங்கவே முடியலை. ஒரு நாளுக்கே செத்துடுவேன் போல இருக்கு. என்னால இதை தாங்கவே முடியலை. ப்ளீஸ். எனக்கு உதவி பண்ணு. இதை சரி செய்' என்று வேண்டிக் கொண்டு சங்கமித்ரா கண் திறக்க, அவளுக்கு எதிரே, அவள் ...

திருப்பம்-14

Image
 திருப்பம்-14 தனதறையில் விட்டத்தை வெறித்தபடி கால்களைக் கட்டிக் கொண்டு சாய்ந்தமர்ந்திருந்தாள் சங்கமித்ரா. வெறும் பத்து நாட்கள் பழக்கமான ஒருவனுக்காக நீ ரண வேதனைப்பட்டுக் கண்ணீர் வடிப்பாய் என்று யாரும் ஜோசியம் பார்த்துக் கூறியிருந்தால், கொள்ளென்று சிரித்திருப்பாள். ஆனால் இன்று? அவள் அறைக்கு வெளியே அவிநாஷ் மற்றும் சச்சிதானந்தத்திற்கு இடையே பெரும் வாக்குவாதம் ஓடிக் கொண்டிருந்தது. “மாமா என்ன இது? யாருக்காருந்தாலும் தோன்றுறது தான். ஏன் எங்கம்மாக்கு தோன்றாதா? ஒரு மாப்பிள்ளையா தன் பையனுக்கான உரிமையை அவன் புகுந்து வீடு குடுக்கனும்னு நினைக்க மாட்டாங்களா? ஏன் நீங்க உங்க பொண்ணுக்கு அவ புகுந்த வீட்டில் சமமரியாதைக் கிடைக்கனும்னு எதிர்ப்பார்க்க மாட்டீங்களா?” என்று அவிநாஷ் கேட்க, “ஆமா மாப்பிள்ளை. நிச்சயம் சம மரியாதையை எதிர்ப்பார்ப்பேன். இன்னொருத்தருக்கான மரியாதை குறைக்கக் கேட்க மாட்டேன்” என்று சச்சிதானந்தம் கூறினார். “அய்யோ மாமா.. இதென்ன மாமா சின்னப்பிள்ளத்தனமா?” என்று அவன் ஆற்றாமையாய் கேட்க, “அவங்க தான் மாப்பிள்ளை அப்படி நடந்துக்குறாங்க. அப்படி ஒரு குடும்பத்துல என் பொண்ணு ஒன்னும் வாக்கப்பட்டு போக ...

திருப்பம்-13

Image
 திருப்பம் -13 அனைத்தையும் அடக்கப்பட்டக் கோபத்துடன் பார்த்த வளவன் அமைதியாக இருக்க, “ஏம்லே அமைதியாருக்க?” என்று தெய்வா கேட்டார். “ஓம்பேச்சுக்கு அவேம் மறுப்பானாம்மா? என்று திரிபுரா கேட்க, “யாரைக்கேட்டு எம்முடிவ நீங்க எடுத்தீய?” என்று அடக்கப்பட்டக் கோபத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான். “என்னம்லே?” என்று திரிபுரா அதிர்வாய் கேட்க, “யாரைக் கேட்டு எம்முடிவ நீங்களா எடுத்துக்கிட்டீயனு கேட்டேம்” என்று கத்தினான். அவன் சப்தத்தில் வீடே ஒரு நொடி ஆட்டம் கண்டிருக்கும் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. “ஏ மக்கா.. அம்மா உன் நல்லதுக்குதேம்” என்று தெய்வா பேச வர, “எது நல்லது?” என்று கத்தினான். அவர் பதறிக் கொண்டு பின்னே ஓரடி வைக்க, “வளவா வெசனப்படாத. ஐயா பேசிகிடுதேம்” என்று சுயம்புலிங்கம் மகனை சமாதானம் செய்ய முன்வந்தார். “அவியட்ட பேசுற வார என்ன ஐயா செஞ்சீய?” என்று வலி நிறைந்தக் குரலில் அவன் கேட்க, பெரியவர் மனம் வருந்தி மகனையும், கோபத்துடன் மனைவியையும் பார்த்தார். “லே..” என்று திரிபுரா ஏதோ பேச வர, விரல் நீட்டி பத்திரம் காட்டியவன், “அவிய அவிய, அவிய இஸ்டத்துக்குதேம் கட்டிருக்கீய. நாங் குறுக்கால வந்த...

திருப்பம்-12

Image
 திருப்பம்-12 "ஹலோ" என்று அழுத்தமான குரல் காதில் விழ, தன் நெஞ்சாங்கூட்டை அழுத்திக் கொண்டவள் அலைபேசியை சற்றே இறுக்கிப் பிடித்து, "ம்ம்" என்று மெல்லிய ஒலியில் முனகினாள். "ஓன் முடிவு என்ன?" என்று எவ்வித பூசலுமின்றி அவன் பளிச்சென்று கேட்டுவிட, இங்கு பெண்ணவளுக்கு வியர்த்து வழியத் துவங்கியது. "கேள்வி கேட்டேம்" என்ற இரண்டே வார்த்தையில் அவள் நெஞ்சில் நீர் வற்றச் செய்திருந்தான்‌. பதில் பேசிட இயலவில்லையா? தைரியமில்லையா? என்று அவளுக்கே தெரியவில்லை! "அ..அப்பா என்ன சொல்றாரோ.." என்று கூறுவதற்குள் கண்களில் நீர் வழியத் துவங்க, இதழ் கடித்து அடக்க முற்பட்டாள். "ஓம் மனசுக்கு என்ன படுதுனு கேட்டதாதேம் நெனவு" என்று வார்த்தைகளில் பெரும் அழுத்தம் காட்டினான் திருமாவளவன். "நானா என்ன முடிவு செய்ய?" என்று வாய்க்குள் அவள் முனகியது அவனுக்குக் கேட்காமல் இல்லை. "கல்யாணம் பண்ணப்போறவிய யாரு?" என்று மீண்டும் அழுத்தமாய் அவன் குரல் ஒலிக்க, "எல்லாம் தெரிஞ்சே பேசுற உங்கக் கிட்ட என்ன பதில் சொல்றதுனு எனக்கு தெரியலைங்க" என்று கதறும் குரலை...

திருப்பம்-11

Image
 திருப்பம்-11 இரவுணவை முடித்த அவிநாஷ், கிளம்பும் முன் சங்கமித்ராவை தனியே அழைத்துச் சென்று “பாப்பா” என்று பரிவாய் அழைக்க, “நான் வேணும்னே அழல அத்தான். நிஜமாவே சட்டுனு அதட்டிட்டா எனக்கு அழுக வந்துடுது. நானும் அதை கண்டிரோல் பண்ணத்தான் பாக்குறேன். நிஜமா அவங்க திட்டிட்டாங்கனு கோபம் கூட இல்ல. பட்டுனு அதட்டவும் கண்ணீர் வந்துடுது” என்று கண்களில் நீர் வழிய இயலாமையோடு அவள் கூறினாள். “ஒன்னுமில்லடா. இதை மாத்திக்குறேன் பெயர்ல ஒரு இன்ஸெகியூரா உன் மைண்ட்ல ஏத்திக்குற நீ. அதனாலதான் உன்னால மாத்த முடியலை. முதல்ல இதை ஒரு குறையா பாக்குறதை நிறுத்து. இதெல்லாம் இயல்பா வர்றது தான். சட்டுனு யாராது அடிச்சா கோவம் வரும்ல? அதுபோல இதுவும் ஒரு உணர்வு. அவ்வளவு தான். ரொம்ப காம்ப்லிகேட் பண்ணாத. பக்குவம் தேவைதான். அதுக்காக கல்யாணத்துக்காக இதை மாத்திக்குறேன் அதை மாத்திக்குறேன்னு முயற்சி பண்ணி கஷ்டபடுத்திக்காத” என்றான். கண்ணீரோடு அவனைப் பார்த்தவள், “இதான். இதுக்கு தான் அத்தான் நான் உங்கட்ட உரிமையா இருக்கேன்” என்று கூற, “நீ என் பாப்பாடா” என்று அவள் கன்னம் கிள்ளினான். பின் நிலைமை சீராகிட, அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வந்த...